Header Ads



ஏமாற்றப்பட்டவரின் வலி (மனதை உருக்கும், ஹசன் அலியின் வேதனை)

-ARA.Fareel-

முப்­பது வருட கால­மாக மரத்தின் அடி­யி­லி­ருந்து அதன் வளர்ச்­சிக்கு நீர் வார்த்துக் கொண்­டி­ருந்த ஹசன் அலிக்கு விடை கொடுத்து விட்­டார்கள். மரமே தனது வாழ்க்­கை­யாக எண்­ணி­யி­ருந்த அவரை 'நீங்கள் மரத்தின் நிழலில் இருந்­தது போதும்' என்று தள்ளி வைத்து ஓரம் கட்டி விட்­டார்கள்.

ஹசன் அலியின் பொதுச்­செ­ய­லாளர் பதவி பறிக்­கப்­பட்­டு­விட்­டது என்ற தகவல் கிடைத்­ததும் பலர் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­விட்­டனர். என்ன நடந்­தது சேர்? கூறு­வீர்­களா? என்று கேட்டோம்.அவர் அமை­தி­யாக,  நிதா­ன­மாக பதி­ல­ளித்தார்.''

டிசம்பர் 14 ஆம் திகதி நடை­பெற்ற உச்ச பீட கூட்­டத்தில் பொதுச் செய­லாளர் பதவி விவ­கா­ரத்தில் நானும் தலை­வரும் முரண்­பட்டு பிரிந்திருக்கக் கூடாது. கட்சி பிள­வு­ப­டக்­கூ­டாது. கட்­சியை காப்­பாற்ற வேண்­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. தலை­வரும், நானும் கதைத்து ஒரு முடி­வுக்கு வர வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக கமிட்­டி­யொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது.அடுத்த தினம் டிசம்பர் 15 ஆம் திகதி உயர்­பீட உறுப்­பினர் அன்­வரின் தெமட்­ட­கொ­டை­யி­லுள்ள காரி­யா­ல­யத்தில் நானும் தலை­வரும் சந்­தித்தோம். அங்கு வந்த தலைவர் முதலில் வுழூ செய்து கொண்டார். பின்பு இரண்டு ரக்அத் சுன்னத் தொழு­கையை நிறை­வேற்­றினார். என்னை கட்­டி­ய­ணைத்து முஸாபஹா செய்து கொண்டார். பிரச்­சி­னை­களைத் தீர்த்­துக்­கொள்வோம் என்றார்.

நான் தலை­வரிடம் தெரி­விக்க வேண்­டி­ய­தை­யெல்லாம் தெரி­வித்தேன். நான் தேர்­தலில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­த­போது  தேசியப் பட்­டி­யலில் எம்.பி.பதவி தரு­வ­தாகக் கூறி அதனைத் தடுத்­த­தையும் விளக்­கினேன். அனைத்­தையும் தலைவர் ஏற்­றுக்­கொண்டார். நான் வுழூ­வுடன் கதைக்­கிறேன். அது நான் தந்த உறுதி. அதனை நான் நிறை­வேற்­றுவேன் என்றார். தேர்­த­லொன்று விரைவில் வரப்­போ­கி­றது. கட்­சியை முடக்க முடி­யாது. தேர்தல் ஆணை­யா­ளரைச் சந்­தித்து விட்டுக் கொடுப்­பு­களைச் செய்ய வேண்­டு­மெ­னவும் கூறினார்.  நீங்கள் என்ன சொல்­கி­றீர்கள்? என்ன செய்­யப்­போ­கி­றீர்கள் என்றும் என்னிடம் வின­வினார்.

ஜன­வரி 9 ஆம் திக­தி­யன்று பாரா­ளு­மன்ற அமர்வில் நீங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி பிர­மாணம் செய்து கொள்­ளலாம். அதற்­கான ஏற்­பா­டுகள் அனைத்தும் செய்­யப்­படும். நாளைக்குப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வுள்ளார். சகல அதி­கா­ரங்­களும் கொண்ட செய­லாளர் பத­வியை பேராளர் மாநாட்டில் உங்­க­ளுக்குத் தருவேன் என்று கூறி தலைவர் என்னை மீண்டும் முஸாபஹா செய்து கொண்டார்.

அப்­போது என்­று­மில்­லாத நம்­பிக்கை தலைவர் மீது ஏற்பட்­டது. நானும் மஃரிப்  தொழுது விட்டு வுழூ­வு­டனே இருந்தேன். சுன்னத் தொழுது விட்டு ஒரு முஸ்லிம் தரும் உறுதி மொழியை நம்­பா­விட்டால் நான் ஒரு முஸ்­லி­மாக இருக்க முடி­யாது. அதனால் நானும் நம்­பினேன்.மறுநாள். அது டிசம்பர் 16 ஆம் திகதி. தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவைச் சந்­திப்­ப­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. எமக்­கான சந்­திப்பு நேரம் பிற்­பகல் 3 மணிக்கே தரப்­பட்­டிருந்தது. நான் அங்கு பிற்­பகல் 2.45 மணிக்கே சென்­று­விட்டேன். எமது நேரம் வரும் வரை தேர்­தல்கள் ஆணைக்­குழு தலை­வரின் அலு­வ­ல­கத்தில் காத்­தி­ருந்தேன். அப்­போது தலைவர் வந்தார். வந்­ததும் எனது கையில் ஒரு பைலைத் தந்தார். அந்தப் பைலினுள் சல்மான் எம்.பியின் இரா­ஜி­னாமா கடிதம் இருந்­தது. 

சல்மான் தனது இரா­ஜி­னாமா கடி­(16.12.2016) செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­க­வுள்ளார். இப்­போது அதற்­காக அவர் பாரா­ளு­மன்­றத்­துக்கு போய்க்­கொண்­டி­ருக்­கிறார் என்றார். ஆனால் சல்மான் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை கொடுக்­க­வில்லை.தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வு­ட­னான சந்­திப்பின் போதும் எனக்கு பொதுச் செய­லாளர் பத­வியும் தேசி­யப்­பட்­டி­யல் எம்.பி பத­வியும் வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். ஜன­வரி 9 ஆம் திகதி நான் பாரா­ளு­மன்­றத்தில் இருக்க முடியும் என்றும் உறு­தி­யாகக் கூறினார்.

ஜன­வரி 7 ஆம் திகதி அல்­லது ஜன­வரி 8 ஆம் திகதி என நினைக்­கிறேன். என்னைத் தொலை­பே­சி­யூ­டாகத் தொடர்பு கொண்டார். 10 ஆம் திக­திக்கு தாருஸ்­ஸ­லா­முக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்­தார். அவ­ரது அழைப்பை ஏற்று தாருஸ்­ஸ­லா­முக்குப் போனேன்.

நான் மூதூ­ருக்குப் போகிறேன். என்­னுடன் வாருங்கள் என்று தாருஸ்­ஸ­லாமில் வைத்துக் கூறினார், 15 ஆம் திகதி புத்­த­ளத்தில் ஒரு புரோ­கிராம் இருக்­கி­றது. நீங்கள் வர­வேண்டும் என்றார். அன்று சல்­மானின் இரா­ஜி­னாமா பற்­றியும் பேசினார். சல்மான் ஜனவரி 16 ஆம் திக­தியே இரா­ஜி­னாமா கடி­தத்தை கைய­ளிக்­க­வுள்­ளளார். அதனால் உங்கள் பெயர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக 18 ஆம் திக­தியே கசெட்  பண்­ணப்­படும் என்றும் தெரி­வித்தார்.

புத்­த­ளத்­துக்கு நானும் அவ­ருடன் போனேன். இரு­வரும் இரவு சாப்­பாட்டை முடித்தோம். உங்­க­ளுக்கு நாளை காலையில் கோல் பண்­ணுறேன் என்று கூறிச்­சென்­றவர் அதன் பின்பு என்னை தொடர்பு கொள்­ள­வில்லை. 

கடந்த 11 ஆம் திகதி நடை­பெற்ற கட்­டாய உயர்­பீட கூட்­டத்தில் நிர்­வா­கிகள் தெரிவு இடம் பெற்­றது. தலை­வ­ராக ரவூப் ஹக்­கீமும் செய­லா­ள­ராக மன்சூர் ஏ.காதரும்  நிய­மிக்­கப்­பட்­டனர். எனக்கு தவி­சாளர் பதவி வழங்­கப்­பட்­டது. நான் மறுத்தேன். சகல அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய செய­லாளர் பத­வி­யையே நான் வேண்டி நின்றேன்.நஸீர் அஹ­மட்டும் அன்­வரும் என்­னிடம் வந்து தவி­சாளர் பத­வியை எடுங்கள். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை பிறகு தரு­கிறோம் என்­றார்கள். ஹரீஸ் எம்.பியே என்னை  இந்தப் பத­விக்கு முன்­மொ­ழிந்தார். அவ­ருக்கு நான் நன்றி கூறினேன். ஆனால் இந்தப் பத­வியை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டேன் என்றேன்.

செய­லாளர் பத­விக்­கான நிய­மன நேரத்தில் கட்­சியின் தலைவர், செய­லாளர் நிய­மிக்கும் அதி­கா­ரத்தை எனக்குத் தாருங்கள் என்று வேண்டிக் கொண்டார்.செய­லாளர் பத­வியில் மாற்றம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. மன்சூர் ஏ.காதரே செய­லா­ள­ராக இருக்க வேண்டும். நான் நிய­மிப்­ப­வரை விரும்­ப­ா­விட்டால் நீக்கிக் கொள்­ளலாம் என்றார். நிஸாம் காரி­யப்பர் இதை நியா­யப்­ப­டுத்­தினார். 

இவ்­வி­டத்தில் ஜவாட் எழுந்தார். நாளைக்குப் பேராளர் மாநாடு. ஹசன் அலி தவி­சாளர் பத­வியை வேண்டாம் என்று கூறி­விட்டார். அதனால் அவர் பேராளர் மாநாட்டில் சாதா­ரண கதி­ரையில் தான் அமர வேண்டும். அந்தக் காட்­சியை எம்மால் பார்க்க முடி­யாது. அவர்தான் கட்சி என்று கூறினார் ஜவாட். சேர்…. தவி­சாளர் பத­வியை ஏற்றுக் கொள்­ளுங்கள். நீங்கள் மேடையில் இருக்க வேண்டும் என்­றார்கள். கெஞ்­சி­னார்கள்., கோஷம் எழுப்­பி­னார்கள்.

இது என்ன நாடகம்! எனக்­கென்று தனித்­துவம் உள்­ளது. இலட்­சியம் உள்­ளது. எழுந்து நின்றேன். எனது கண்கள் கலங்­கின. உணர்ச்சி வசப்­பட்டேன். டிபரன்ட் மூடுக்­குள்­ளானேன்.எனது 30 வருட அர­சியல் வாழ்­வு  முடி­வுக்கு வந்­துள்­ளது என்று கவ­லை­யுற்றேன். எழுந்து சென்று லீடரைக் கட்­டிப்­பி­டித்து முஸாபஹா செய்தேன். இது எனது கடைசி நாள் என்றேன்.நான் உயர்­பீடக் கூட்­டத்­தி­லி­ருந்தும் வெளி­யே­றினேன். நஸீர், ஜவாட் எல்­லோரும் ஓடி வந்து என்னைத் தடுத்­தார்கள். நான் எனது முடிவில் உறு­தி­யாக வெளி­யே­றினேன்.

11 comments:

  1. so.............eppa enna? next?

    ReplyDelete
  2. almighty will judge accurately. please be patient.

    ReplyDelete
  3. Dear brother Hassanali,
    Rauf Hakeem along with his gang may have engineered/manupilated the process explained by you to have you removed you from the General Secretary position of the SLMC as explained in your interview with brother A.R.A. Fareel, but it is NOT you who Rauf Hakeem has removed from the SLMC, but himself, Insha Allah. Be patient and leave the rest to God AllMighty Allah. Rauf Hakeem may have planned well, but Allah can plan even much better. The ordinary "PORAALIGAL and PAMARAMAKKAL" are with you, Insha Allah. Rauf Hakeem betrayed everyone in the party to become the leader and government leaders to get his perks and positions and Rauf Hakeem sold the SLMC vote bank behind the party membership to Mahinda (18th., amendment) and Ranil(Presidential and General Election 2015). The time is near for Rauf Hakeem to be chased away from the SLMC leadership by the "ACT OF GOD ALLMIGHTY ALLAH - INSHA ALLAH". Patients will will at last, Insha Allah.
    Noor Nizam - "The Muslim Voice).

    ReplyDelete
  4. good decision god bless u

    ReplyDelete
  5. When Mr. Rauf is out? finally, when this SLMC wi be disapread for SL Muslims good future?

    ReplyDelete
  6. Hasn Ali him self was right hand and Partner for Hakeem in every and single injustice hakeem Did for others.
    من أعان ظالما سلطه الله عليه

    ReplyDelete
  7. Appadiye SLMC illamal ponal nallazu

    ReplyDelete
  8. வேர் இ ல்லாத மரம் எதற்கு ,?

    ReplyDelete
  9. பதவி
    பதவி
    பதவி
    இது நம்மவர்களைப்பிடித்த வியாதி....

    உண்மையான சேவகன் பதவிக்கு அலையமாட்டான். அவனை தலைவர் ஒதுக்கினாலும் மக்கள் ஒதுக்கமாட்டார்கள்...

    நீங்கள் எப்படி? மக்கள் சேவகனா? இல்லை கதிரைக்கு காக்காபிடிப்பவரா?

    ReplyDelete

Powered by Blogger.