Header Ads



இலங்கையில் வைத்திய தீவிரவாதம்..!


பாதையில் பதாதைகள் படர தொடங்கின.
செல்லா கணைகள் காதுக்குள் செலுத்தப்பட்டன.
போராட்ட பீரங்கிகள் உயிர்வாதத்தை நெருப்பாய் பீச்சிக்கொண்டிருந்தன.
மேல் நீதிமன்றம் நெருப்பின் மேல் எண்ணெயை ஊற்றியது.

அன்று செவ்வாய்க்கிழமை நேரம் சுமார் இரவு 8.30 உயிர்வாதம் வைத்திய தீவிரவாதமாய் திசை திருப்பப்பட அதுவரை பாதையில் படர்ந்து கொண்டிருந்த செல்லா கணைகள் காரின் கதவை பெயர்த்துக் கொண்டு றவைகளாய் மாறி செல்லத் தொடங்கின.

இக்காலம் கனியும் வரை தன் ஆந்தைக்கண்ணை அகல விருத்துக் கொண்டிருந்த பாராளமன்ற ஜன்துக்கள் அலறி அடித்துக்கொண்டு அரச அறிக்கைகளை அள்ளி வீசின.

அரச வைத்திய பீடத்தின் இதுவரை இருந்த கௌரவம், மரியாதை, பணிவு என்பன ஊடகப்போரால் புதைக்கப்பட தனியார் வைத்திய பீடம் அதை ஊண்டி பதித்து உரமாக்கிக் கொண்டது.

இவ் வைத்திய தீவிரவாத்ததின் வரலாற்றை புறட்டிப்போடும் புதையல் அறிந்த பூதத்தை தேட மோப்ப மூக்குகள்  மூக்கை உறுஞ்சித் திரிகின்றன.

குற்ற புலணாய்வு மற்றும் குற்ற விசாரணை பிரிவின் உத்தியோகபூர்வமான அறிக்கைகள் வெளியாகும் வரை வைத்திய கடும் போக்கு தீவிரவாத செயல்கள்; தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனத்தின் காலநிலையை மாற்றி அனுதாப விளம்பர சாதக காற்றை வீசி வருகின்றன.

Hasni Hamadh NDT
University of Moratuwa
Akkaraipattu




2 comments:

  1. i could not understand, what is the intention of this article. can some one pls explain what is the message the reader should understand by end?

    ReplyDelete

Powered by Blogger.