Header Ads



முஸ்லிம் திணைக்கள கட்டடத்தை திறந்துவைத்து, ஜனாதிபதி ஆற்றிய உரை

தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்­கள மக்­க­ளுடன் ஒற்­று­மை­யாக நல்­லி­ணக்­கத்­துடன் வாழும் ஒரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் மீண்டும் ஓரு யுத்தம் ஏற்­ப­டா­தி­ருக்­கவும் புதிய அர­சாங்கம் திட்­ட­மிட்டு செயற்­ப­டும்­போது அடிப்­ப­டை­வா­தி­களும் அர­சுக்கு எதி­ரா­ன­வர்­களும் அர­சுக்கு எதி­ராக தவ­றான கருத்­துக்­களைப் பரப்பி இன ஒற்­று­மை­யைக் குலைக்க முயற்­சிக்­கின்­றனர்.

இதற்கு அரசாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்­டாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

நேற்று மாலை கொழும்பு 10 ரீ.பி.ஜயா மாவத்­தையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள புதிய முஸ்லிம் பண்­பாட்டு திணைக்கள கட்­ட­டத்­தொ­கு­தியை திறந்து வைத்து உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். ஜனா­தி­பதி முஸ்லிம் பண்­பாட்டு அலுவல்கள் திணைக்­க­ளத்தின் இணை­யத்­த­ளத்­தையும் திறந்து வைத்தார்.

ஜனா­தி­பதி தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
 எந்த மொழி பேசு­ப­வர்­க­ளாக இருந்­தாலும், எந்த இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் அனை­வரும் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழும் சூழலை உரு­வாக்­கு­வதே அர­சாங்­கத்தின் இலக்­காகும். தமிழ், முஸ்லிம், சிங்­கள சமூ­கத்தில் அடிப்­ப­டை­வா­திகள் இருக்­கி­றார்கள். இவர்­களே நாட்­டுக்கு எதி­ரா­கவும் இன நல்­லி­ணக்­கத்­துக்கு எதி­ரா­கவும் சூழ்ச்சி செய்­கி­றார்கள்.

நாம் எந்த இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் இதனை எதிர்க்க வேண்டும். ஒவ்­வொரு இனத்­திலும் தலை­வர்கள் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு இட­ம­ளிக்கக் கூடாது.

நாட்டில் அனைத்து மதங்­க­ளுக்கும் அனைத்து இனங்­க­ளுக்கும் தத்­த­மது சமய, கலா­சார, மொழி அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டு வாழ்­வ­தற்கு அர­சாங்கம் சுதந்­திரம் வழங்­கி­யி­ருக்­கி­றது. அவர்­க­ளுக்­கான உரி­மை­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. அதனால் நாட்டில் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப நாம் அனை­வரும் கைகோர்க்க வேண்டும்.

எமது நாட்டை வெளி­நாட்­ட­வர்­களின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்து மீட்டு சுதந்­திரம் பெற்­றுக்­கொள்­வ­தற்கு 1940ஆம் ஆண்­டு­களில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் தலை­வர்கள் போராட்­டங்கள் நடத்­தி­ய­தாக வர­லாறு தெரி­விக்­கி­றது.

அன்று அவர்கள் இன நல்­லி­ணக்­கத்­துடன் ஒற்­று­மை­யாக போரா­டி­ய­தாலே 1948 இல் எமக்கு சுதந்­திரம் கிடைத்­தது என்­பதை நாம் மறந்து விட­லா­காது. அன்று அனைத்து இன­மக்­களும் ஒற்­று­மை­யாக செயற்­பட்­ட­த­னா­லேயே எமது நாட்­டிற்கு அந்­நிய ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து சுதந்­திரம் கிடைத்­தது என்­பதை சிலர் மறந்து விட்­டனர்.

இந்­நாட்டை அபி­வி­ருத்­தியின் பால் முன்­னெ­டுக்க ஒற்­றுமை அவ­சி­ய­மாகும். மக்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழும் சூழல் உரு­வாக்க முயற்­சிக்கும் போது சில சக்­திகள் இதற்கு எதி­ராகச் செயற்­ப­டு­கின்­றன

. நாம் அனை­வரும் குரோதம், வைராக்­கியம், சந்­தேகம், பொறாமை, போட்டி இல்­லாது சுதந்­தி­ர­மாக வாழப்­ப­ழகிக் கொள்­ள­வேண்டும்.

62 இலட்சம் மக்கள் சிங்­கள, தமிழ், முஸ்லிம் பேதங்­க­ளின்றி ஒன்­றி­ணைந்து என்னை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­தார்கள். எனது வெற்­றிக்கு உதவி செய்­தார்கள். இந்த ஒற்­றுமை தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

இந்தப் புதிய கட்­டடத் தொகு­திக்கு 52 கோடி ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது. கட்­டடம் சிறந்­தவோர் இடத்தில் அழ­காக அமை­வ­தினால் மாத்­திரம் பயன்­படப் போவ­தில்லை. இக்­கட்­ட­டத்தில் தொழில் செய்­ப­வர்கள், வாழ்­ப­வர்கள் தமது பொறுப்பை உணர்ந்து சகோ­தர உணர்­வுடன் பணி­பு­ரிய வேண்டும். மொழி, சமயம், கலா­சாரம், என்று பேதங்கள் நில­வக்­கூ­டாது. மக்கள் ஒற்­று­மை­யாக நல்­லு­ற­வுடன் வாழ வேண்டும் என்றே அனைத்து சம­யங்­களும் போதித்­துள்­ளன. நாட்டில் நல்­லி­ணக்கம் உரு­வாக, நாடு செழிப்­புற, நாம் அனை­வரும் உறுதி பூணுவோம் என்றார்.

முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மினால் ஜனா­தி­பதி பொன்­னாடை போர்த்­தப்­பட்டு, நினை­வுச்­சின்னம் வழங்கி கௌர­விக்­கப்­பட்டார். ஜனா­தி­பதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் நினைவு புத்­த­கத்திலும் கையொப்­ப­மிட்டார்.

நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் , ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காதர் மஸ்த்தான், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் டுலிப் விஜயசேகர, வெளிநாட்டு தூதரங்களின் அதிகாரிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ARA.Fareel

No comments

Powered by Blogger.