Header Ads



ஈரானில் கட்டட விபத்து, 30 தீயணைப்பு வீரர்கள் பலி


ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உயர் கட்டடம் ஒன்று தீப்பிடித்து தரைமட்டமானது. இதில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த கட்டடம் கடந்த 1960-ல் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.