Header Ads



ஜெனீவா கூட்டம் பெப்ரவரி 27 இல் ஆரம்பம் - அரசு உயர்மட்ட குழு செல்கிறது

ஐக்­கிய நாடுகள்  மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி­ மாதம் 27 ஆம் திகதி முதல்  மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள  நிலையில் அக்­கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில்   உயர்­மட்ட  தூதுக்­கு­ழு­வினர்  கலந்­து­கொள்­வ­தற்கு  தயா­ரா­கி­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

குறிப்­பாக  வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ ஆகியோர்  இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில்  தலை­மை­ வ­கித்து கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­க­ப்ப­டு­கி­றது. 

அத்­துடன் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும்  சட்­ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும்   ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் பங்­கேற்­க­வுள்ள இலங்­கையின்  தூதுக்­கு­ழுவில் இடம்­பெ­ற­வுள்­ளனர்.  

அத்­துடன் ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில்  இலங்கை அலு­வ­ல­கத்தின்   பிர­தி­நி­தி­களும்   இலங்கை தூதுக்­கு­ழு­வுடன் இணைந்­து­ கொள்­ள­வுள்­ளனர். 

ஜெனி­வா­வி­லுள்ள இலங்கை அலு­வ­ல­கத்தின்  பிர­தி­நி­திகள்  தற்­போ­தி­ருந்தே  34 ஆவது கூட்டத் தொட­ருக்­கான  ஆயத்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். குறிப்­பாக  மனித உரிமைப் பேர­வையின்  உறுப்பு நாடு­களின்   பிர­தி­நி­தி­க­ளுடன்   இலங்கை பிர­தி­நி­திகள்  கலந்­து­ரை­யாடி வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அந்­த­வ­கையில் அமைச்­சர்கள் மற்றும் உய­ர­தி­கா­ரிகள் தலை­மை­யி­லான உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வா­னது இம்­முறை ஜெனிவாக் கூட்­டத்­தொ­டரில்  இலங்­கையின் சார்பில் கலந்­து ­கொள்­ள­வுள்­ளது. விசே­ட­மாக இம்­முறை கூட்டத் தொட­ரா­னது   இலங்­கைக்கு மிக வும் முக்­கி­ய­மா­ன­தாகும்.  

அதா­வது  கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் இலங்கை தொடர்பில்  நிறை­வேற்­றப்பட்ட பிரே­ர­ணையின் அமு­லாக்கம் தொடர்­பாக  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர்   செயிட் அல் ஹுசைன்  எழுத்­து­மூல அறிக்­கையை வெளி­யி­ட­வி­ருக்­கிறார்.  

அந்­த­வ­கையில் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் இலங்கை தூதுக்­கு­ழு­வா­னது   செயிட்  அல் ஹுசைனின் எழுத்­து­மூல அறிக்­கைக்கு பதி­ல­ளிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

 வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆற்­ற­வுள்ள உரையில்  இலங்­கை­யா­னது ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர்  எவ்­வாறு   வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தது என்­பது தொடர்­பா­கவும்  நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் குறித்தும்  விளக்­க­ம­ளிப் பார் என   எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

இதே­வேளை  விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள்   இடம்­பெற­ வேண்­டி­யதன்  அவ­சியம் தொடர்­பாக இம்­முறை கூட்டத் தொடரில் சர்­வ­தேச நாடு­களும்  சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும்   வலி­யு­றுத்தும் என  தெரிவிக் கப்படுகிறது. 

ஆனால் அவற்றுக்கு  இலங்கை அரசாங் கத்தின் சார்பில்  பதிலளிக்கப்படவுள்ளது.  விசேடமாக   வெளிநாட்டு நீதிபதிகளை   அனுமதிக்க முடியாது என்றும்   நம்பகர மான உள்ளகப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும்   இலங்கையின் தரப்பில்  வலியுறுத்தப்படு மென நம்பப்படுகிறது.

No comments

Powered by Blogger.