பொறியியலாளராக வரவேண்டும் என்பதே, எதிர்கால இலட்சியம் - மன்னாரில் முதலிடம் பெற்ற மாணவன்
தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட ரீதியில் இரண்டு மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
மன்னார் - அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவன் ஹிஜாஸ் ஹினான் அஹமட் மற்றும் மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி விமலதாசன் ஜொசிபியா ஆகிய இரு மாணவர்களும் 180 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பெற்றுள்ளனர்.
இதே வேளை எதிர்காலத்தில் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என முதல் இடத்தைப்பெற்ற மாணவனான ஹிஜாஸ் ஹினான் அஹமட் தெரிவித்தார்.
இதற்கு காரணம் எனது பாடசாலையின் ஆரம்ப பிரிவு ஆசிரியரான திரு.சுபாஸ் அவர்களும், பாடசாலை அதிபரான மாஹிர் அவர்களுமே.
மேலும் எனக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களுக்கும் குறிப்பாக எனது பெற்றோருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன் எனவும் குறித்த மாணவன் கூறினார்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteWish u all the best
ReplyDeleteமாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
ReplyDelete