விக்னேஸ்வரன் மன்னிப்பு கேட்பாரா..?
யாழ் எழுக தமிழ் பேரணியின் போது சி.வீ.விக்னேஸ்வரனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சருமான மகிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மகிந்த அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஸ்வரனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இனவாதத்தை தூண்டுபவையாகவே இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏன் விக்னேஸ்வரன் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்தார் என அரசாங்கம் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அமரவீர கூறியுள்ளார்.
வடக்கில் புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும் என சீ.வி எழுக தமிழ் பேரணியின் போது தெரிவித்திருந்தார்.
காய்த்த மரமே கல்லடி படும்.
ReplyDeleteIf you say that Vikki has to regret for his words then why do you keep mum about Gnasara thero?
ReplyDeleteFirstly arrest him.