கஞ்சா விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய, பௌத்த பிக்கு மீது தாக்குதல்
கஞ்சா விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய கம்பளை குருந்துவத்தகொலவல ஸ்ரீ போதிராம விகாரையின் விகாராதிபதி அத்துருகிரிய சந்திரரத்ன தேரர் மீதுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிக்கு மீது கஞ்சா வியாபாரியும், அவரது மகனுமே தாக்குதலைமேற்கொண்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு இலக்கான பிக்கு கம்பளை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மிக நீண்ட நாட்களாக குறித்த பிரதேசத்தில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைமையப்படுத்தி கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும், இது தொடர்பில்பிரதேசவாசிகளை தெளிவுபடுத்திய குறித்த தேரர் கஞ்சா விற்பனை செய்பவர்களைகுறித்த பிரதேசத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறும் பொலிஸாரிடம்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர்களுக்கு எதிராக பிரதேசவாசிகளும் எதிர்ப்பினைவெளியிட்டு வந்துள்ள நிலையிலேயே சந்தேகநபர்கள் தேரர் மீது தாக்குதல்நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தினையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகதெரிவித்துள்ளனர்.
Post a Comment