Header Ads



தூக்குத் தண்டனை கைதி துமிந்த, சிறைக்குள் கிரிக்கெட் விளையாடியது பற்றி விசாரணை

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கண்காணிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனை கைதியான துமிந்த நேற்று சிறைச்சாலையில் கிரிக்கெட் விளையாடியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனையடுத்து சிறைச்சாலைக்குள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மாத்திரமே வெளியே வர அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் துமிந்த சில்வா மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனையவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதாக நேற்று செய்தி வெளியாகியிருந்தன.

இதனை தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் சிறைச்சாலையினுள் அதிக கண்கானிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

துமிந்த சில்வாவுக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி வழங்கியமை தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைக்குள் நடைபெற்ற சம்பவம் எவ்வாறு ஊடகங்களுக்கு கசிந்தது என்பது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.