என்றுமில்லாத பாதுகாப்புடன், புனித ஹஜ் இன்று ஆரம்பமாகியது
இந்த ஆண்டுக்கான சவுதி அரேபியாவின் ஹஜ் புனித யாத்திரை இன்று (09-09-2016) வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளது.
புனித நகரங்களான மக்கா மதினாவை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு நூற்றுக்கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி பலியானார்கள். அவர்களில் பலர் இரானியர்கள்.
சவுதி அரேபிய அரசாங்கம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய இரான், இந்த ஆண்டு தன் நாட்டைச்சேர்ந்த யாரையும் மெக்காவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
Post a Comment