முஸ்லிம் சேவையில் புகாரி மௌலவியின் 'வரலாற்றில் ஓர் ஏடு' கேட்காமல், நான் உறங்குவது கிடையாது - நீதிபதி கணேசராசா
-Metro-
நீதிமன்றத்திற்கு வரும் அதிகமான இளைஞர்கள் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களாக இருப்பதாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.கணேசராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் 7 ஆவது தமிழியல் விருது – 2015 நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் பாலுமகேந்திரா தமிழியல் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், எமது இளமைக் காலங்களில் புரட்சிகரமான மற்றும் பல்வேறுபட்ட நூல்களை வாசிக்கும் பழக்கங்களை கொண்டிருந்தோம்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் வாசிப்பதற்கு கூட நேரமில்லாத நிலையில் மோட்டார் சைக்கிள்களிலும் கையடக்க தொலைபேசி களிலும் தங்களது காலங்களை கழிக்கின்றனர்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மௌலவி புகாரியின் வரலாற்றில் ஓர் ஏடு எனும் நிகழ்ச்சியை நான் கேட்காமல் உங்குவது கிடையாது.
எழுத்தாளர்கள் வாழ்க்கையில் சிறந்த அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள். கண்ணதாசனிடம் ஒருவர் நீர் மது,மாது, போதைவஸ்துக்கு அடிமையான நீர் எவ்வாறு அர்த்தமுள்ள இந்துமதத்தினை எழுதுவாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர் நான் அதனையெல்லாம் கடந்து வந்ததன் காரணமாகவே இதனை எழுத முடிந்துள்ளது என கூறியுள்ளார்.
ஆகவே வாழ்க்கையின் அனுபவங்களை கற்றவர்கள் அதனை இலக்கியங்கள் மூலமாக வெளிப்படுத்தும்போது அது உணர்வுபூர்வமாக மக்களை துள்ளது என கூறியுள்ளார்.
ஆகவே வாழ்க்கையின் அனுபவங் களை கற்றவர்கள் அதனை இலக்கி யங்கள் மூலமாக வெளிப்படுத்தும்போது அது உணர்வுபூர்வமாக மக்களை சென்றடையும்.
கணேசராசா ஐயா!
ReplyDeleteநீங்கள் இஸ்லாத்தைப் பற்றி மேலும் படிக்க விரும்பினால் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பினையும் வாங்கி படியுங்கள்.