பாதைகளில் குப்பைகளை கொட்டுவோருக்கு, எதிராக நடவடிக்கை
கொழும்பு மற்றும் சன நெருக்கடியான பிரதேசங்களில் முறையற்ற விதமாக குப்பைகள் கொட்டுவதை தடுக்க விஷேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுகாப்புச் செயலாளரின் திட்டப்படி இலங்கை பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியன இணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
கொழும்பு மாநகர சரப மற்றும் மகரகம, பொரலஸ்கமுவ, கடுவெல, ஸ்ரீ ஜெயவர்தனபுற கோட்டே, தெஹிவளை/கல்கிசை, மொரட்டுவ ஆகிய உள்ளாட்சிப் பிரதேசங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 05ம் திகதியில் இருந்து 09ம் திகதி வரை சுற்றாடல் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், இவ்வாறு குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் 84 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment