குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற, இலங்கையரின் சிறுநீரகங்கள் மாயம்
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் தனது சிறுநீரகங்களை இழந்த நிலையில் இலங்கை வந்துள்ளார்.
குவைத்தில் பணி புரிந்த சந்தர்ப்பத்தில் திடீர் நோய் வாய்ப்பட்ட குறித்த பெண் 3 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் இலங்கை வந்துள்ளார்.
புளத்சிங்கள- மில்லகந்தையை சேர்ந்த 41 வயதான இந்தப் பெண் 3 குழந்தைகளின் தாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
அத்துடன் தனது மனைவிக்கு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
என்ன கொடும சார் இது !ஒரு மனிதனுக்கு இரண்டு கிட்னிதானே உள்ளது .இங்கே அந்தப்பெண்ணுக்கு கிட்னிகளைக் காணவில்லையாம். அப்பா அந்தப்பெண்ணுக்கு இரண்டுக்கும் மேட்பட்ட கிட்னிகள் உள்ளனவோ ?ஏனென்றால் அவளுக்கு கிட்னிகளைக் காணவில்லை ஆனால் உயிரோடு வந்திருக்கிறாளாம் . என்ன ஒரு ஆச்சரியம் ..........
ReplyDelete