Header Ads



கிழக்கு முதலமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ், என்பதால்தான் இனவாதிகள் கூக்குரலிடுகிறார்கள்

கடந்த 20.05.2016 ம் திகதி சம்பூர் தமிழ் வித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கிழக்கு முதல் நசீர் அத் திருகோணமலை சம்பூர் பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளையிடும் தளபதியுடன் நடந்து கொண்ட  விதம் குறித்து சில சிங்கள ஊடகங்கள் திரிவுபடுத்தி கூறியது விடயமாக அங்கு நடந்த உண்மைகள் இதுதான்

குறித்த பாடசாலை கடந்த யுத்த காலத்தில் கடற்படையினரால் 2006.03.25 ம் ஆண்டு காலப்பகுதியில் ஆக்கிரமிக்கபட்டிருந்தன பின்னர் 20.05.2016ம்  திகதி கடற்படையினரால் கையளிக்கபட்டது

பின்னர் டேவிட் பீரிஸ் கம்பனியினால் குறித்த பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தன அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு முதல்வர் அழைக்ககப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

பின்னர் அதே நாளில் அமெரிக்க தூதுவரும் சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக வருகை தர இருந்தமையால் கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாடுகளை கடற்படை தளபதியிடம் ஒப்படைத்திருந்தார் பின்னர்

குறித்த நிகழ்விற்கு முதல் அமைச்சர் அழைக்கபட்டிருந்தும்  நெறிமுறை தவறி முதல்  அமைச்சரை நடத்தியமை தொடர்பில்தான் அவர் குறித்த நிகழ்வில் அவ்வாறு நியாயத்தை கேட்டுக்கொண்டு கடிந்து கொண்டார்

உண்மையில் குறித்த நிகழ்வு  யாரால் ஏற்பாடு செய்யபட்டிருக்க வேண்டும் கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்டயுதபாணி அவர்களால் ஏற்பாடு செய்யபடிருக்க வேண்டும் இருந்தும் எவ்வாறு ஆளுநர் கடற்படை தளபதியிடம் ஒப்படைப்பார் இன்னும் கிழக்கு மாகாண அதிகாரங்களை இழக்கின்ற மாகாண சபையாக நாம் இருக்க முடியாது கடந்த காலத்தில் நடந்ததை போன்று இன்னும் இன்னும் இச்சபையை நடாத்த அனுமதிக்க முடியாது கடற்படை தளபதியுடன் கடிந்துகொண்டது மாத்திரமன்றி ஆளுனரிடமும் நீங்கள் முறையாக நடக்கவில்லை முழுப்பொறுப்பும் நீங்களே என்ற தொனியிலும்  முதல் அமைச்சர் பேசினார்

கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பவர்கள் முதல் அமைச்சர் அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் காரணம் என்று கூறுபவர்கள் இவ்வாறு அதிகாரம் பறிக்கப்படும் நேரத்தில் நியாயத்தை கேட்டால் அது முறையற்றது என சில சிங்கள ஊடகங்கள் திரிவு  தெரிவிப்பது முஸ்லிம் முதல் அமைச்சர் என்பது மாத்திரமன்றி அதிகாரங்களை வழங்கினால் சில இனவாதிகளுக்கு  கிழக்கு மாகாணம் சிறு பான்மையினரிடத்தில் சென்று  விடும் என்ற அச்சமே திரிவு படுத்துவதற்கு காரணம்

தொடர்ந்தும் நல்லாட்சி ஏற்படுத்த பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தை கிழக்கு ஆளுநர் தன்னிச்சையாக கொண்டுசெல்ல அனுமதிக்க முடியாது

கிழக்கு மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களை ஒப்பிட்டால் கிழக்கு மாகாணத்தில்தான் படையினர் உட்பட சில அரச அதிகாரிகள் மற்றும் ஆளுநர் தலையீடு அதிகம் அவற்றை பிழையான நிலைமைகள் தோன்றும்போது அந்த இடத்திலேயே சுட்டிக்காட்டி  நிறுத்தவேண்டும் அதைத்தான் கிழக்கு முதல்வர் செய்தார்

வட மாகாண முதல்வர் தமது மாகாண சபை அதிகாரங்களை பாதுகாப்பதில் முன்னிற்பதை உறுதியாக கொண்டு வட மாகாண ஆளுனரை மாற்றி அமைத்த சம்பவம் மாத்திரமன்றி தமது அதிகாரங்களில் யார் கை நுழைத்தாலும் ஆளும் அரசாங்கத்தை விமர்சிப்பது நாம் அறிந்த விடயம்

ஆனால் கிழக்கு முதல்வர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் முதல் அமைச்சர் என்பதால் தான் இன வாதிகள் கூக்குரலிடுவது முஸ்லிம்களிடத்தில் இருந்து முதல்வர் பதவியை பறிக்க போடும் வேஷம் மாத்திரமன்றி சிலர் இந்த நிகழ்வில் குளிர்காய எத்தனிக்கின்றனர் என்பதுதான் உண்மை என்று  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்

8 comments:

  1. என்னடா குளிர்காய்ரது.............. செய்ரதையும் சென்ஞ்சு போட்டு....... குளிர்காய்ரதுனு வேறயா மவனே..............

    இவனெல்லாம் ஒரு மு்.அமைச்சர் ??? தாருஸ்சலாத்தையே தன்ர பெயருக்கு மாத்தின இவனெல்லாம் ஒரு மு. அமைச்சர் ??

    ReplyDelete
  2. ஒரு மேடையில் , அதுவும் பாடசாலை மாணவர்களுக்கான வைபவமொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, அதுவும் வேறொரு நாட்டின் தூதுவர் முன்னிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்ற சபை ஒழுக்கம் தெரியாத இவரை ஒரு முஸ்லிம் முதலமைச்சர் என்று சொல்வதற்கு தன்மானமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வெட்கப்பட வேண்டும். தகுதி இல்லாதவனுக்கெல்லாம் தலைவர் பதவி கொடுத்தால் இவ்வாறுதான் நடந்து கொள்ளுவானுகள். யார் செய்தாலும் பிழையை பிழை என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும். மாறாக அவர் ஒரு முஸ்லிம் என்பதால் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் காரர் என்பதால் அல்லது இனவாதத்தால் கூக்குரல் இடுகிறார்கள் என்று கதை அளப்பதை விடுத்து இந்த முதலமைச்சரின் பணத்திமிரையும் பதவித்திமிரையும் கொஞ்சம் அடக்கி வைக்க சொல்லுங்கள். அதுவே சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பாக அமையும்.

    ReplyDelete
  3. நஸீர் அஹ்மதின் நாடகம் அரங்கேறிய வீடியோ கிளிப்பை சரியாக அவதானித்துவிட்டு உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்டுவிட்டு இனவாதம் பேசுங்கள். புரடகோல் பற்றிய எந்த முன்னறிவும் இல்லாத ஆசாமி உலகில் தலைசிறந்த டிப்லோமட்டுக்கு முன்னால் தான் மீன்மார்கட்டில் பழைய மீன் விற்கும் புதிய 3ர்ட் கிளாஸ் மீன்வியாபாரி என்பதைப் பகிரங்கமாக காட்டிவிட்டாா்.

    ReplyDelete
  4. கிழக்கு முதல் அமைச்சர் கடற்படையைக் கடிந்து கொண்டது சரியானதுதான்!

    இனிமேலாவது, முதல் அமைச்சர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது, இராணுவம் பிரசன்னமாவதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

    சிவில் நிர்வாகம் இருக்கும்போது, இந்த இராணுவத்தை அழைப்பது எதற்கு?

    ReplyDelete
  5. For heaven sake do not bring COMMUNALISM into this please. Sri Lanka Muslims are a power to themselves, Alhamdulliha. But that does NOT mean a Muslim Chief Minister of the Eastern Province should have behaved like what CM Ahamed Nazeer did at the Sampoor School function, especially in front of school children and a foreign diplomatic dignitary. Do NOT (Insha Allah) try to make this another Aluthgama or Beruwela or Dambulla like episode/scenario and bread COMMUNALISM among the Muslims. Please keep away from spreading communalism. CM Ahamed Nazeer did was WRONG. The people have said what they want. Let the "due process" of LAW take over. Do not try to grab cheap votes to the SLMC or any Muslim political party or Muslim politician using this as a COMMUNAL stunt.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  6. East is Muslims power base.

    Chief Minister was right to say what is against the Muslims and what is against him.

    Navy officer is only a civil servant.

    Chief Minister has the total right to warn against this Naval officer.

    ReplyDelete
    Replies
    1. இந்த ப(ரு)ப்பு வேகாது. நீ யாரு எண்டு பழைய காமன்ஸ் அ வாசித்த எல்லாருக்கும் தெரியும்.

      Delete
  7. Hahaha Sampathan உங்கள் பேச்சில் ஏதோ கெட்ட வாடை வருகிறதே !!!!

    கவுண்டமணி ஸ்டைல சொல்லனும்ன!
    கழுத மேய்க்கிற பையனுக்கு இப்படி ஒரு அறிவா எண்டு ஓமேல எல்லாரும் பொறாம படுவாங்க ...உலக மகா நடிப்புடா சாமி!!!!

    ReplyDelete

Powered by Blogger.