Header Ads



"துயர் துடைக்கும், தூய ரமழான்" - உதவும்படி முஸ்லிம் தனவந்தர்களிடம் வேண்டுகோள்

-Mohamed Naushad-

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்துள்ள ஊடக சந்திப்பு தற்போது கொழும்பு 07 சுவடிகள் கூட கேற்போர் கூடத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெறது. 

அண்மையில் இயற்கை  அழிவால் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இதில் முஸ்லிம்கள் இன்னும் சில தினங்களில் புனித றமழான் மாதத்தை எதிர் நோக்கியவர்களாக உள்ளனர். அவர்கள் பற்றிய எல்லா விவரங்களும் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்திடம் உள்ளது. அவர்கள் மீண்டும் தமது வாழ்வை தொடங்க முஸ்லிம் தனவந்தர்கள் முன்வரவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு தனவந்தர்களை நேரடியாக தொடர்புபடுத்தி இந்த உதவிகள் சரியான மக்களை சென்றடைய தேவையான ஒருங்கிணைப்பு பணிகளை தனது மன்றம் மேற்கொள்ளும் என முஜிபுர் ரஹ்மான் கூறினார்.



No comments

Powered by Blogger.