Header Ads



படை அதிகாரியை, நசீர் அஹமட் திட்டியதை ஏற்கமுடியாது - பாதுகாப்பு அமைச்சர் ருவண்

அண்மையில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நசீர் அஹமட், திருகோணமலையின் சம்பூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கடற் படை அதிகாரி ஒருவரை திட்டியமையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் ஊடகப் பிரிவு இது குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை ஒழிக்க போராடிய இராணுவ வீரர்களை அவமதிக்க யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொறுப்புள்ள பதவியிலுள்ள அரசியல்வாதி எனும் அடிப்படையில், குறித்த நிகழ்வின் போது, ஏதேனும் பிரச்சினை இருந்திருப்பின், அதனை புத்திசாதுரியமாக தீர்த்திருக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் குறித்த அறிக்கையில் ருவண் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.