Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் செயலமர்வு - ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ”தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள்” எனும் தலைபிலான துறைசார் செயலமர்வு எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு 7, பிலிப் குணவர்தன மாவத்தை இலக்கம் 9 இல் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதிர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள் தொடர்பான செயற்பாடுகளை வழிநடாத்தும் துறைசார்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அறிஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். 

இச்செயலமர்வில் கலந்துகொள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதி சபை உறுப்பினர்களும் மற்றும் துறைசார் புத்திஜிவிகளும் ஆர்வமுள்ளவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

Powered by Blogger.