Header Ads



"கடைசி நிமிடம்" ரத்த வெள்ளத்தில் உயிருக்காக மன்றாடும் கடாபி (புதிய வீடியோ)


லிபியா நாட்டை சர்வாதிகார ஆட்சியால் உலுக்கிய கடாபி துப்பாக்கி முனையில் ரத்த வெள்ளத்தில் இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
லிபியா நாட்டை 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி, 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களின் மத்தியில் சிக்கிய கடாபி, அவர்களிடம், ரத்த வெள்ளத்தில், என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு டிரக் வண்டியின் மீது ரத்த வெள்ளத்தில் கடாபி அமர வைக்கப்பட்டிருக்கிறார், அவரை சுற்றி கிளர்ச்சியாளர்கள் உற்சாகத்தில் கத்துகிறார்கள்.

ஒரு கிளர்ச்சியாளர், அவரது கழுத்தினை இறுக பிடித்துக்கொண்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கிறார், கடாபியின் முகம் மற்றும் உடம்பிலிருந்து ரத்தம் ஊற்றுகிறது, அந்த தருணத்தில் கடாபி, உயிருக்காக மன்றாடுகிறார்.

இந்த காட்சியை Mr Almani என்ற நபர் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளார், கடாபி இறந்து 4 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்நபர் கூறியதாவது, இஸ்லாமிய மதத்தில் காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒரு நபரை தண்டிப்பது குறித்து போதிக்கப்படவில்லை, ஆனால் அங்கு கூடியிருந்தவர்கள் யாரும் இந்த சம்பவத்தை தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், அந்த கூட்டத்தில் Mohammed Elbibi என்ற 17 வயது நபர், கடாபியின் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு அதனை உலகத்திற்கு காட்டுகிறார்.

துப்பாக்கி வைத்திருக்கும் அந்த நபரை, கிளர்ச்சியாளர்கள் சேர்ந்து தூக்கி பிடிக்கின்றனர், கடாபி, தான் பயன்படுத்தி வந்த துப்பாக்கியை தனது மகனுக்கு கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டது.

ஆனால், அத்துப்பாக்கி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது, இத்துப்பாக்கியானது, கடாபியை கிளர்ச்சியார்கள் தாக்குகையில் தரையில் இருந்து எடுக்கப்பட்டது என அந்நபர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ரத்த வெள்ளத்தில் கடாபி உயிருக்காக மன்றாடும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ வெளியாகியுள்ளது. புதிய வீடியோ





5 comments:

  1. Gadaffi wanted to unite African nation and bring a currency like euro for African nation.that idea was summoned at his African nation meeting. This statement cost his life.
    Obviously west wants to rule the rich confinant Africa by divide and rule policy ( which they successfully doing in the Middle East now ) so when someone try to unite that's it. Same thing happened in Congo. Africa's natural resource rich country but what's happening there now, it's the outsider benefiting from its wealth.

    ReplyDelete
  2. ivn allahvin kuraanuku edra kithbul ahder green book enru eluthi makkaluku padika sonnan lenin sari enru sonnan quranul vilayadivargaluku ithu mudivo mahudoodi qurananuku vimarsanam eludinan thokil idapataan

    ReplyDelete
  3. President Putin asked in Denmark why the NATO bombed Gadafi's
    palace many times ? Gadaffi , in an Arab meeting said " what
    happened to Saddam can happen to any of the Arab leaders."

    ReplyDelete
  4. Dictators lives end like this The same fate befell on tiger leader Veluppillai prabakaran,Hitler,Satham,and Mousolini.

    ReplyDelete
  5. எந்தவொரு மத அடிப்படைவாதிகளிடமுமுள்ள பொதுவான இயல்புகளில் ஒன்று அவர்கள் குரூர இரசனையாளர்களாகவும் இருப்பது!

    ReplyDelete

Powered by Blogger.