Header Ads



தேசிய பாதுகாப்புக்கு, அச்சுறுத்தல் விடுக்கும் ஞானசாரா

-M.JAWFER.JP-

கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் போதுபல சேனா இயக்கம் தான் நினைத்த விடயங்களில் எல்லாம் மூக்கை ஓட்டி பிராச்சினைகளை உருவாக்கியது,மட்டுமல்லாமல் விரும்பிய நாடுகளுக்கல்லாம் சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டது இவ்வாறான சுற்றுப்பிரயாண வேளைகளில் அதிகமாக ஐரோப்பிய நாடுகளுக்கு போய் வந்ததை நாம் அறிவோம். அந்த காலகட்டத்தில் இவர்கள் இஸ்ரவேலர்களுடனான தொடர்புகளை மேற்கொண்டு இருந்ததும் நாமறிவோம். இவர்களின் தொடர்பாடல்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்ளிடம் அதிகமாக இருந்தது.

இப்போது விடயத்துக்கு வருவோம் தற்போதுள்ள உலகப்பயங்கரவாதிகளான ISIS தீவரவாதிகளின் சகல நடவடிக்கைகளும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானவைதான் என்ற விடயங்கள் பரிபூரணமாக அம்பலமாகியுள்ள இந்நிலையில் கடந்த குறுகிய காலத்துக்குள் இவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்குமான நெருக்கம் அதிகமாக இருப்பது பல வகையிலும் நிருபணமாகிவிட்டது. இப்போது போரிட்டு வரும் இவர்களின் அடுத்த இலக்கு சிரியாவை கைப்பற்றினால் அதனைத்தொடர்ந்து அண்மித்துள்ள முஸ்லிம் நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதுதான் இலட்சியம்.அதனால் இந்த தீவரவாதத்தின் செயற்ப்பாடு ஒரு குறிப்பிட்ட காலத்தோடு முடியும் என்பது பகற்கனவு.

கடந்த ஓரிரு மாதங்களாக யஹூதிகளின் வருகை இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில் போதுபல சேனா விட்டிருக்கும் அறிக்கை அதாவது கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் ISIS Tதீவரவாதிகளின் தாக்குதல் நடக்கும் என்று முன்கூட்டி கூறுமளவுக்கு இவர்கள் அறிந்து இருக்க காரணம் என்ன? அமரிக்க இஸ்ரவேலர்களின் கூலிப்படையான இந்த தீவரவாதிகளுக்கும் இவர்களுக்கும் எதாவது  ஒரு தொடர்பு இல்லை என்றால் இவர்களால் இவ்வாறு கூற முடியாது.

நம் நாட்டு இராணுவம் உலகின் புகளைபெற்ற இராணுவம் என்பது உலகறிந்த உண்மை. அத்தோடு நம்நாட்டின் உளவுத்துறையும் மிகத்திறமையானது.இந்த இராணுவமும் உளவுத்துறையும் இலங்கையில் இஸ்லாமிய தீவரவாதம் இல்லை என்று பல தடவை   அடித்துச்சொல்லியுள்ள நிலையில்  இந்த பல சேனாவுக்கு மட்டும் எவ்வாறு தெரிய வந்தது. உளவுத்துறை சுதாகரிக்க வேண்டும்.போதுபல சேனாவின் செயலாளர் கலகோட அத்த ஞானசேரவிடம் உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் சொல்லவது உண்மை என்றால் மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்குள்  இலங்கை நுழைந்து  விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.அல்லது இவ்வாறு அரச படையினதும் உளவுத்துரையினதும் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் வகையில் பொய் பிரச்சாரத்தை கட்டவிழுத்துவிடும் இந்த ஞானாசாராருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு இவ்வாறான வதந்திகளை கிளப்புவோருக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் எச்சரிக்கை விடப்பட வேண்டும்.

 இவரின் இந்த வகையான பொய்யான கருத்துக்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.நிம்மதியாக இருக்கும் மக்களை பீதியூட்டி கவலையடைய செய்வது முஸ்லிம்களை மட்டுமல்ல இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு மகனும் இந்த விடயமாக கவலை அடைகின்றாகள்.ஆகவே அரசாங்கம் இவரின் இந்தமாதிரியான கருத்துக்களை அலட்சியப்படுத்தாமல் தீர விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.    
 

No comments

Powered by Blogger.