Header Ads



சுவிட்சர்லாந்து குறித்த அசிங்கமான செய்தி (18+)

சுவிட்சர்லாந்து நாட்டில் குதிரைகளுடன் உடலுறவு கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களை விட கூடுதலாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் நாட்டை சேர்ந்த Tier im Recht என்ற விலங்குகள் நல அமைப்பு கடந்த வியாழக்கிழமை பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சுவிட்சர்லாந்தில் விலங்குகளை தவறாக நடத்தும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 2014ம் ஆண்டு வரை 1,709 என்ற எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

இவற்றில் 105 குற்றங்கள் குதிரைகளுக்கு எதிராக நடைபெற்றுள்ளது. குறிப்பாக, இந்த எண்ணிக்கையில் 10 சதவிகிதத்தினர் குதிரைகளுடன் உடலுறவில் ஈடுப்பட்டுள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு குறித்து பேசிய விலங்குகள் நல ஆர்வலரான Andreas Rüttimann என்பவர், ‘கடந்த காலங்களை விட விலங்குகளை தவறாக நடத்தும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.

குறிப்பாக, குதிரைகளிடம் தவறாக நடந்துக்கொள்ளும் பழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.

ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட, தங்களுக்கு கிடைக்க பெறாத குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 18,000 பண்ணைகளில் சுமார் 1,10,000 குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் மீது பாலியல் உணர்வுகளில் சிக்கியுள்ள சுமார் 10,000 பேர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக Andreas Rüttimann தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.