Header Ads



2 மாகாணங்களுக்கு ஜனாதிபதியால், புதிய முதலமைச்சர்கள் நியமிக்கபட்டனர்


வெற்றிடங்களாக இருந்த மேல் மாகாண மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிகள் (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) நிரப்பப்பட்டுள்ளன.

இன்று (8) காலை இரண்டு புதிய முதலமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதியின் முன்னிலையில் இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி மேல்மாகாண முதலமைச்சராக இசுரு தேவப்பிரியவும், வடமேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தஸநாயக்கவும் பதவி ஏற்றுள்ளனர்.

இந்த இரண்டு மாகாணங்களின் முதலமைச்சர்களாக இருந்த பிரசன்ன ரணதுங்க மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.