Header Ads



நாங்கள் மிகவும் முன்னிலையில் உள்ளோம், 117 ஆசனங்களை கைப்பற்றுவோம் - மஹிந்த

இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முன்னிலையில் உள்ளதாகவும் 117 ஆசனங்களை பெற்று கொள்ள முடியும் என குருநாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த மஹிந்த, பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், நாங்கள் மிகவும் முன்னிலையில் உள்ளோம். மக்களிடம் சமாதானமாக செயற்படுமாறு கேட்டு கொள்கின்றேன். நாடு முழுவதும் நான் தொடர்புகளை ஏற்படுத்தி விசாரித்தேன். அவ் அனைத்து பக்கத்திலும் சிறந்த பதில்களே கிடைத்தன.

அதேபோன்று குருணாகல் மாவட்டத்திலும் அவ்வாறான சிறந்த பதில் கிடைத்துள்ளது. நாங்கள் 117 ஆசனங்களை கைப்பற்றுவோம். நாட்டின் சமாதானத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தான் நாங்கள் கூறுகின்றோம்.

பல்வேறு கட்டு கதைகள் பேசப்படுகின்றது நாங்கள் அவற்றினை நம்புவதாக இல்லை. நாங்கள் எதிர்பார்ப்பது சமாதான தேர்தலில் சிறப்பான முடிவை மாத்திரமே. ஏன் என்றால் அந்த வெற்றி எங்களிடம் உள்ளது. மக்கள் எங்களுடனே என்பது தெளிவாக தெரிகின்றதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. நாடு முழுவதும் நீங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது உங்களிடம் பணம் வாங்கிய உங்கள் ஆட்களிடம்தானே.ஆவீர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள்.நானை அதிகாலை மூணு மணிக்கு பின் அந்த போனுக்கு டயல் செய்தால் off இருக்கும் அப்போது நீங்க உங்கள் போனைத்தான் பூமியில் எரிந்து உடைப்பீர்கள் .

    ReplyDelete
  2. பணம் கொடுத்து 117 பேரவா .அது உங்கட ஆட்சியல் .உங்களுக்கே ஆப்பு தான்.

    ReplyDelete
  3. அட மாங்கா மடயா இது ஒனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல

    ReplyDelete
  4. Ane mahindha mame...... Thawama dhawas heenayen innawa wage...... Ane powww. Dhenga ithin anthimata mama thamai. manga mama.......

    ReplyDelete

Powered by Blogger.