"ராஜித சேனாரத்ன முஸ்லிம்களிடம், மன்னிப்பு கோர வேண்டும்"
பதவிக்காகவும் பட்டத்திற்காகவும் முஸ்லிம்கள் மதம் மாறினார்கள் என்ற வரலாறே இந்த நாட்டில் கிடையாது. எனவே அமைச்சர் ராஜித தலைவர் ஹக்கீம் குறித்து தெரிவித்த கருத்தை மாற்றிக்கொண்டு அவர் பகிரங்கமாக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என கல்முனை மாநகர சபையின் பிரதிமேயரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான ஏ.எல். அப்துல் மஜீத் கூறினார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கல்முனை மாநகரமேயர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் மாநகரசபை சபை சபா மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதி பதவி கிடைக்குமென்றிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது மதத்தையும் மாற்றிக்கொள்வார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் பிரதிமேயர் அப்துல் மஜீத் கவலையும் கண்டனமும் தெரிவித்து சபையில் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் இந்த விடயம் தொடர்பாக கூட்டத்தில் கவலையும் கண்டனமும் தெரிவித்து உரையாற்றியதுடன் இறுதியாக மேயர் நிஸாம் காரியப்பரும் உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்றவராக உரையாற்றினார்.பிரதிமேயர் மேலும் உரையாற்றுகையில்,
அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் அமைச்சர் ராஜிதவின் கூற்று குறித்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. மிகவும் விமர்சனத்துக்குரியதாக அது மாறியிருக்கின்றது.
கருத்தும் கண்டனமும்
ஜனாதிபதிப் பதவி கிடைக்குமென்றிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது மதத்தையும் மாற்றிக்கொள்வாரென அமைச்சர் ராஜித தெரிவித்த கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இலங்கை ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தம் ஒன்றை கொண்டுவர வேண்டுமென்பதற்காக முன்மொழியப்பட்ட பிரேரணைகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அவருடைய தலைமையில் சிறுபான்மைக் கட்சிகளும் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டன.
இரு பிரதான கட்சிகளும் அவர்களுடைய அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான ஒரு முன்மொழிவாகவே 20 ஆவது திருத்தமிருக்கின்றது என சிறுபான்மைக் கட்சிகள் சுட்டிக்காட்டின.
சிறீமாவோ
1972 ஆம் ஆண்டு சிறீமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்க முதலாவது குடியரசு சாசனத்தை கொண்டுவந்தபோது அப்போதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அதனை எதிர்த்தனர். அத்துடன் அந்த நகலை தீயிட்டும் கொளுத்தினர்.
சிறுபான்மைச் சமூகத்திற்கு இருக்கும் ஒரேயொரு காப்புடமையான செனட் சபையை ஒழிக்கும் 29ஆவது சரத்தின் "ஏ" பிரிவு ஏன் நீக்கப்பட்டதெனவும் அது போன்று சிறுபான்மை சமூகத்தின் உரிமையை இல்லாமல் செய்யும் சரத்துகளிருக்கின்றன என்பதற்காக தமிழ்த்தலைவர்கள் போராடினார்கள். அண்ணன் அமிர்தலிங்கம் சிறையிலடைக்கப்பட்டார். இத்தகைய கடந்த கால அரசியல் வரலாறுகளுண்டு.
ஜே.ஆர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த அரசியல் யாப்பு கூட சிறுபான்மை சமூகங்களைப் பல விடயங்களில் பாதிக்கின்றது என்ற குரல்களும் அவ்வப்போது எழுந்து வந்துள்ளன. எனவே தான் இந்த 20 ஆவது திருத்தமென்பது 35 வருடங்களுக்குப் பிறகு கொண்டு வரப்படும் அரசியல் சீர்திருத்தமென்பதால் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டும் உத்தரவாதப்படுத்தும் நிலைமையை உருவாக்க வேண்டுமென்பதில் எம் தலைவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
பெரும் தலையிடி
சிறிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்காகச் செயற்பட்டமை சிங்கள இனவாத, வகுப்பு வாத சக்திகளுக்கு பெரும் தலையிடியாகவே இருந்தது. குறிப்பாக எமது தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஒன்றிணைந்து எடுத்த 20ஆவது திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் தான் மிக மோசமான கருத்தை அமைச்சர் ராஜித முன்வைத்துள்ளார்.
சுயநலவாதி
ரவூப் ஹக்கீம் ஒரு சுயநலவாதி, சமூகத்திற்காக அவர் இரட்டை வாக்கு முறையைக் கொண்டு வரவில்லை, அவருடைய கட்சியை வளர்க்கவும் அவருடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவுமே கொண்டுவருகிறார் என அமைச்சர் ராஜித கூறியது மட்டுமன்றி ஜனாதிபதிப் பதவி கிடைக்குமாகவிருந்தால் அவர் தனது மதத்தையும் மாற்றிக் கொள்வாரென்ற மிக மோசமான கருத்தையும் வெளியிட்டார்.
15 வருடங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 15வருடங்களாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்றார். பல தடவைகள் சமூகத்திற்காக அமைச்சர் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளார். அமைச்சர் பதவிக்காக அங்குமிங்கும் அலைந்து ஆல வட்டம் போடும் ஒரு தலைவரல்ல முஸ்லிம் காங்கிரஸின் தலைவரென்பதை இத்தகையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ராஜித
ஆனால் அமைச்சர் ராஜித வளர்த்த கட்சியையே விட்டு வெளியேறி அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து கொண்ட வரலாற்றை மறுத்து விடமுடியாது. முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் தமது சமயத்தை மேலாக மதிப்பவர்கள். அதற்காக போராடி மடியக்
கூடியவர்கள்.
ருஷ்தி - தஸ்லீமா
முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் காட்டிக் கொடுக்கும் கருத்துக்களைத் தெரிவித்த சல்மான் ருஷ்தியையும் தஸ்லீமா நஸ் ரீனையும் சமுதாயத்திலிருந்து தூக்கியெறிந்தது எமது சமுதாயம். எனவே அமைச்சர் ராஜித இதைப்புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி பதவி பட்டம் பணத்திற்காகச் சமயத்தைத் துறக்கமாட்டான். ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக எவர் மதம் மாறினார்களென்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
முஸ்லிம்கள்
முஸ்லிம்கள் அப்படியல்ல. இலங்கை வரலாற்றில் அப்படி எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பதவிக்காக பட்டத்திற்காக பணத்திற்காக முஸ்லிம்கள் மதம் மாறினார்களென்ற வரலாறே கிடையாது. எனவே அமைச்சர் ராஜித சேனாரத்ன தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் பகிரங்கமாக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறினார்.
இருவருக்கும் என் வித்தியாசம்.
ReplyDeleteஹகீம்: சரியான நேரத்தில் பிழையான முடிவு எடுப்பார், பேச வேண்டிய இடத்தில் பேச மாட்டார்.
ராஜித: சரியான நேரத்தில் சரியான முடிவும் ,பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசுவார் முஸ்லிம்களுக்காக... சென்ற தேர்தலில் நடத்தாது, தற்போது கொழும்பில் குப்பை கூளங்களை அகற்றும் படி my3 சொன்னது எல்லாம் மறக்க வில்லை நாம்.
இவர் முஸ்லிகளிடம் மன்னிப்பு கேட்காமலே மன்னிக்கப் பட வேண்டியவர்தான் டாக்டர் ராஜித சேனாரத்ன , அந்த வார்த்தைக்குரிய பெறுமதி தெரியாமல் அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைதான் அது . இதை விட சிர்க்கான வார்தையெல்லாம் (மகிந்தவின் நாமம் சொன்னால் பரகத் கிடைக்கும் ) அஸ்வர் ஏற்ட்கனவே பேசிவிட்டார். கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்களே வாய் மூடி இருந்த போது முஸ்லிம்களுக்காக தொடர்ந்து பேசியவர்களில் இவர் முக்கியமானவர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது . இவர் போன்றவர்களின் வார்த்தைகள்தான் அன்று எமக்கு ஆறுதலளித்து.
ReplyDeleteஅடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் சமூகத்துக்காக குரல் கொடுப்பது போன்று பூச்சாண்டி காட்டுகிறார்களே தவிர சமுக பற்று ஒன்றும் அவர்களிடம் இல்லை. கட்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சமுகத்துக்கு கொடுப்பது இல்லை. இருபதாவது திருத்தச்சட்டம் சிறிய கட்சிகளுக்கு பாராளுமன்ற அங்கத்தவர்களை குறைத்து விடும் , முஸ்லிம் காங்கிரசும் இதனால் பாதிப்படையும் என்கிற கவலையே தவிர சமுகத்திலிருந்து நல்ல பல தலைவர்களை உருவாக்கி பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லுவது தடைப் பட்டு விடுமே என்கிற கவலை அவர்களிடம் இல்லை. இன்றைக்கு வரைக்கும் இத்தனை பேரை வைத்துக் கொண்டு குறைந்தது வில்பத்து பிரச்சினைக்கு கூட வாய் திறக்காதவர்கள் ராஜிதவின் வார்த்தையை துக்கிக் கொண்டு வாய் கிழிய கத்துகிறது வேடிக்கையாக இருக்கிறது.
மஜீத் காக்கா, அரசியலில் சாணாக்கியம் இருந்தால் இப்படியான பிரச்சினைகள் வராது. ஒரே மந்திரி சபையில் இருந்து கொண்டு அங்கு பேசவேண்டியதை , முரண்படும் சக அமைச்சர்களுக்கு சரியான தெளிவான விளக்கம் கொடுக்கவேண்டியதை விட்டு விட்டு வெளியில் வந்து கூப்பாடு போட்டால் ( ராஜிதவையும் ஏனைய சில அமைச்சர்களையும் சேர்த்து சாடி அறிக்கை விட்டாவர் ) இப்படிதான் பேசுவார்கள். உங்களது தலைவரின் நடவடிக்கையும் ராஜிதவை அப்படி கூர தூண்டியுல்லது என்றே கருத தோன்றுகிறது. பதவிக்காக தான் முஸ்லிம்களை விற்று ராஜபக்க ஆட்சியில் 18 இக்கும் கை உயர்த்தி, ராஜபக்ச அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு அத்தனை அட்டுழியம் நடக்கும் மட்டும் பணம் பதவியை அனுபவித்துக் கொண்டு இருந்து விட்டு கடைசி நேரத்தில் 500 மில்லியன் ( சுபையிர் பகிரங்கமாக கூரியது ) ரணிலிடம் வாங்கிக் கொண்டு இடம்மாறியது...etc. ரணிலுக்கு காலை வாரி மகிந்தவிடம் வருவதும் பின் மகிந்தவுக்கு காலை வாரி ரணிலிடம் வருவதும் உங்க தலைவரின் கூத்து தான் என்ன? இப்ப உங்கள் தலைவர் ரணிலிடம் சரணாகதி அரசியல் செய்ய வெளிக்கிடுவார் போல் தெரிகிறது. சூடு சொரணை இருந்தால் இந்த முறை தனித்து கேளுங்கோ அதன் பிற்பாடு உங்கள் தலைவரும் அவரது அடிவருடிகளும் வேண்டிய கூத்தை அடித்து பட்டம் பதவியை பெற்று கொள்ளுங்கள்.
ReplyDeleteரவூப் ஹக்கீமின் பதவி ஆசை ; இஸ்லாத்தை அல்ல பொதுபலசேன முஸ்லிம் மக்களுக்கு அட்டூளியங்களை செய்த போதல்லாம், அதற்காக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்தான் டாக்டர் ராஜித சேனாரத்ன இப்போது எம்மில் பலருக்கு இனவாதியாக மாறிவிட்டார். மு.கா. தலைவரைப் பற்றி அவர் சொன்ன செய்திதான் அதற்கு காரணம். இதை அறிவு ரீதியாக அனுக வேண்டுமே தவிர, அரசியல் இலாபம் தேடும் ஒரு சில கூஜா தூக்கிகளின் கதைகளைக் கேட்டு முட்டாள் தனமாக இனவாத முத்திரை குத்த வேண்டிய தேவை இல்லை. அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து ஒரு இனவாத கருத்தல்ல. அவர் அமைச்சர் ஹக்கீம் பற்றிய ஒரு கருத்தை கூறியிருந்தார். அது சரியான கருத்தாக அல்லது பிழையான கருத்தாக இருக்கலாம். இலங்கை முஸ்லீம்களுக்கு கலாச்சார மத அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த முஸ்லீம் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் மௌனமாக இருந்த சந்தர்பங்களில் அமைச்சர் ராஜித பகிரங்கமாக எதிர்த்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். நிச்சயமாக ஒரு இனவாதி அப்படி செய்திருக்க மாட்டார். ராஜிதவை இனவாதிகளால் மிகவும் தூசிக்கப் பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். இதனால்தான் ராஜிதவுக்கு முன்னால் சனாதிபதி மஹிந்த மதவாத அமைப்புகளின் விடயங்களில் தலையீடு செய்ய வேண்டாம் என்று பகிரங்கமாக அச்சுறித்தியிருந்ததும் நம் எல்லோரும் அறிவோம்.
ReplyDeleteஇவரை இனவாதியாகப் பார்க்கும் எம் சகோதர்கள் பேருவளையில் முஸ்லீம்களுக்கு உதவியதை மறந்துவிட்டார்கள் . அத்துடன் ஹக்கீம் என்ற ஒருவருக்கு தனியாக கூறப்பட்டதை சமூகம் சார்ந்ததாக திரிவு படுத்தியவரே உண்மையான இனவாதியாக கருதப்பட வேண்டும்.
எமது சமூகத்துக்கு உதவ இருக்கின்ற ஒன்றிரெண்டு பேரையும் எதிரியாக்கி அரசியல் இலாபம் தேடுபவர்கள்தான் எமது உண்மையான எதிரி. அதைவிடுத்து தன் இனத்தவனின் தவறை மறைத்து இனவாதம் பேசிக்கொண்டு அதற்கு இஸ்லாமிய வாத மூலாம் பூச முற்படுவதென்பது, முஸ்லிம் சமூகத்தை நாசகார சதிவலையில் மாட்டிவிட்டு அதில் குளிர்காய கங்கனம் கட்டிக்கொண்டிருக்கும் இனவாத ஊடகங்களுக்கு தீனிபோடும் வேலையாக அமைந்துவிடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ரவுப் ஹக்கீமின் அதி மோக பதவி ஆசையைத்தான் ராஜித இங்கு குறிப் பிட்டார் அன்றி இனவாதத்தை அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும் ,ஏன் ராஜித அவ்வாறு கூறினார் எனின் கடந்த காலம்களில் ரவூப் ஹக்கீமின் கட்சி தாவல்கள்