Header Ads



தேர்தலில் வெற்றிபெற, 900 கோடி ரூபாவை விழுங்கிய மஹிந்த - ரணில் குற்றச்சாட்டு

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மத்திய வங்கியின் சுமார் 900 கோடி ரூபாவை தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக மஹிந்த பயன்படுத்தியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பிலேயே ரணில் இதனை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னர், இந்த மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பமாகுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.