Header Ads



ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும், சுநத்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்  போட்டியிடுவதற்காக சில சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தவர்களில் விசாரணை நடத்தி அவர்களின் கட்சி உறுப்புரிமை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாக எந்தவொரு உறுப்பினரும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த விடயம் உண்மையென்றால் அது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 13 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் யானைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.