Header Ads



மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதில்லை என்ற, மைத்திரியின் தீர்மானத்தில் மாற்றமில்லை - நாவின்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்குவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் மாற்றமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு மஹிந்த ராஜபக்ச இதுவரையில் சுதந்திரக் கட்சித் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமாக எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

எனவே ஒவ்வொரு இடத்தில் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித அடிப்படையிலும் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த போட்டியிட்டால் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்குவதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளதாக எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு தொலைபேசி ஊடாக அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.