UNP அரசாங்கத்தை உருவாக்க, ஆயத்தமாகுங்கள் - ரணில் உத்தரவு
தங்கள் தொகுதிகளுக்கு சென்று தேர்தல் நடவடிக்கைகளை ஆயத்தப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஓகஸ்ட் மாதம 17ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொள்வது அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கு முகம் கொடுக்க ஆயத்தமாக இல்லை எனவும் 100 நாட்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழியுறுத்தியதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் ஐக்கிய தேசிய கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை காப்பந்து அரசாங்கமாக செயற்படும்.
WELCOME UNP
ReplyDelete