Header Ads



மஹிந்த அணி கள­மி­றங்­கினால், குழி­தோண்­டி ­பு­தைத்துவிடுவோம். - ரணில் சூளுரை

மஹிந்த ராஜ­பக்ஷ இந்­நாட்டின் பிர­த­ம­ரானால் அவ­ரது அமைச்­ச­ர­வையில் வெள்ளை வேன் கடத்தலுக்கு பொறுப்­பா­னவர் யார்? எதனோல் போதைப்­பொருள் மற்றும் கஸி­னோ­வுக்கு பொறுப்­பாக உள்­ளவர் யார்? திரு­டர்­க­ளுக்கு உறு­து­ணை­யாக செயற்­ப­டு­ப­வர்கள் யாரென்­பதை மக்­க­ளுக்கு பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்டும் என சவால் விடுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி தேர்­த­லைப்­பொன்று ராஜ­பக் ஷ அணியை பொதுத்­தேர்­தலில் மண் கவ்வ வைப்போம் என்றும் தெரி­வித்­துள்ளார்.

கலே­வெ­லவில் இடம்­பெற்ற ஐ.தே.கட்சி அமைப்­பா­ளர்கள் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். பிர­தமர் இங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

எதிர்­வரும் பொதுத்­தேர்­த­லுக்­கான அனைத்து ஆயத்­தங்­க­ளையும் ஐதே கட்சி மேற்­கொண்­டுள்­ளது. தேர்தல் விஞ்­ஞா­ப­னமும் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது கொள்கை பிர­க­ட­னத்­திற்கு அப்பால் சென்ற நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் நன்­மை­க­ளையும் அபி­வி­ருத்­தி­க­ளையும் இலக்கு வைத்­த­தாக அமைந்­துள்­ளன.முக்­கி­ய­மாக நல்­லாட்­சிக்­கான அனைத்தும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

மஹிந்த சிந்­த­னையை போன்று பொய்­யான வாக்­கு­று­திகள் எம்­மிடம் கிடை­யாது. தேர்­த­லுக்கு நாம் தயார். ஆனால் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ எம்­முடன் போட்டி போடத்­த­யாரா? இல்­லா­விட்டால் பயத்தால் ஒதுங்கிக் கொள்­ளப்­போ­கின்­றாரா?

முடிந்தால் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு என்னை தோல்­வி­ய­டைச்­செய்து காட்­டு­மாறு சவால் விடுக்­கின்றேன்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ அணியை தோல்­வி­ய­டையச் செய்­தது போன்று பொதுத்­தேர்­தலில் மஹிந்த அணி கள­மி­றங்­கினால் குழி­தோண்­டிப்­பு­தைத்து விடுவோம்.

மஹிந்­த­வுக்கும் அவ­ரது அணிக்கும் மீண்டும் தலை­தூக்க இட­ம­ளிக்­க­மாட்டோம்.பத்து வரு­டங்­க­ளாக மஹிந்த ஆட்­சியில் மக்­க­ளுக்கு எது­வி­த­மான சலு­கை­களும் தேவை­களும் வழங்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் நாம் 100 நாள் வேலைத்­திட்­டத் தில் மக்­க­ளுக்கு பல சேவை­களை சலு­கை­களை வழங்­கினோம்.எதிர்­கா­லத்தில் நாட்டில் தொழில் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்தி இளைஞன் யுவ­தி­களின் வேலை­யில்லாப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­க­ளையும் திட்­டத்தை வகுத்­துள்ளோம்.

எமது ஆட்­சியின் கீழ் எவ­ரா­வது போதைப் ­பொருள் அல்­லது எதனோல் கொண்டு வந்தால் சிறையில் அடைப்போம். மக்­க­ளுக்கு சேவை செய்­ப­வ­ராக இருந்தால் எமது கட்­சியை சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் எமது ஆதரவை வழங்குவோம்.இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தமது தலைவரான ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவுக்கும் எதிராக செயற்படுகின்றனர் என்றும் பிரதமர் தெரிவித்துள் ளார்.

1 comment:

  1. Ivaru ippa aalilla veetla chatti paanai odakkiraru !

    ReplyDelete

Powered by Blogger.