Header Ads



"ஷிராந்தியை விசாரணைக்கு அழைத்ததால் கோபத்திலிருந்த நாமல், பொலிஸாரை கல் எறிந்து கொல்ல வேண்டுமென கூறச்சொன்னார்"

பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின்  உயரதிகாரியில் இருந்து கீழ்நிலை அதிகாரிகள் வரை ராஜபக்ச அரசாங்கத்தில் நாமல் ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமையவே கல் எறிந்து கொலை செய்வதாக பிரசித்தமான மேடையில் கூறினேன் என  பாராளுமன்ற உறுப்பினர் என தென் மாகாண அமைச்சர் டிவி.உபுல் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் சில தினங்களில் வாக்குமூலம் பெறவென டிவி.உபுல் அழைக்கப்படவுள்ளார்.

இது தொடர்பில் சட்ட ஆலோசனைப் பெற நேற்று முன்தினம் சட்டத்தரணிகளைக் காணச் சென்ற உபுல், நாமலின் கோரிக்கைக்கு அமைய தான் அவ்வாறு கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நாளன்று காலை ஷிராந்தி விசாரணைக்கு அழைக்கப்பட்டதால் நாமல் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

மேலும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் மகன் நாமலுக்கு அளித்த சமூக வலைத்தள பதில் காரணமாகவும் நாமல் கோபத்தில் இருந்துள்ளார்.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் டிவி.உபுலை அழைத்துள்ள நாமல் ' நாளை நாம் ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு மன்னர் கால தண்டனை வழங்கப்படும்' என்று கூறியதை தான் அவர் முன்னாள் பகிரங்கமாகக் கூறியதாக உபுல் கூறியுள்ளார்.

இரகசிய பொலிஸார் வழக்கு பதிவு செய்தால் டிவி.உபுல் தனக்கு பாதுகாப்பு சாட்சியாக நாமலின் பெயரை கூறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஹா..ஹா... ஹாஆஆஆஆஆஅ....! முதுகெலும்பில்லாத உமக்கெல்லாம் ஒரு அரசியல் தேவையா???? உனக்கு ஒரு மந்திரி பதவி வேற?? நான் இப்படி கூறுவெனா? என்று சொல்வதற்கு நாமல் ராஜபக்சவுக்கு எவ்வளவு நேரமாகும்?? உசார் மடையன்....!! ...இப்ப சட்டத்தரணிகள், பொலிஸ் என்று...!! தேவையா...?? hi..hihi...ஹீஈ..

    ReplyDelete
  2. ஹா..ஹா... ஹாஆஆஆஆஆஅ....! முதுகெலும்பில்லாத உமக்கெல்லாம் ஒரு அரசியல் தேவையா???? உனக்கு ஒரு மந்திரி பதவி வேற?? நான் இப்படி கூறுவெனா? என்று சொல்வதற்கு நாமல் ராஜபக்சவுக்கு எவ்வளவு நேரமாகும்?? உசார் மடையன்....!! ...இப்ப சட்டத்தரணிகள், பொலிஸ் என்று...!! தேவையா...?? hi..hihi...ஹீஈ..

    ReplyDelete

Powered by Blogger.