Header Ads



2 ரயில்கள் நேருக்குநேர் மோதின, இரு ரயில்களினதும் சாரதிகள் வெளியே பாய்ந்து உயிர் தப்பினர்

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த சரக்கு ரயிலும் நாவலப்பிட்டியிலிருந்து ஹப்புத்தளை நோக்கிச் சென்ற சரக்கு ரயிலும் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

வட்டகொடை புகையிரத நிலையத்தில் வைத்து இவ்விபத்து இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டகொடை புகையிரத பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இரு புகையிரதத்தின் சாரதிகள் புகையிரதத்திலிருந்து பாய்ந்து தங்களின் உயிர்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர். இரு புகையிரதத்திலும் பயணித்த சிலர் சிறுகாயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டகொடை புகையிரத பொறுப்பதிகாரிகளின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.