Header Ads



மைத்திரியின் தீர்மானத்தை, எதிர்க்கிறார் மஹிந்த

பதவிகாலம் நிறைவு பெறும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஆணையாளர் ஒருவரின் கீழ் கொண்டுவருவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி சபைகளின் பதவிகாலத்தை நீடித்து பின் தேர்தல் நடத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாராஹென்பிட்டி அபயாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். 

எவ்வித தவறும் செய்யாத முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில், உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரத்தை, ஆணையாளரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர இருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தலின் பின்னரே உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெறுமெனவும் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மறுப்பதற்கோ ஏற்றுக்கொள்வதற்கோ நீர் யாரப்பா?

    ReplyDelete

Powered by Blogger.