முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யை காணவில்லை..!
-சாஹுல் ஹமீத்-
'' மக்கள் விசனம்'' வாக்களித்த முசலி சமுகத்திற்கு வாழ்வீட பிரச்சினை வாய்முடி மௌனியான ஆதம்பாவா பாருக்
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள மரிச்சிகட்டி பாலைக்குழி மற்றும் கரடிகுழி மக்கள் கடந்த முன்று வாரகாலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
சிங்கள மற்றும் இனவாத அமைப்புகள் அத்துடன் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை தடுக்கும் நோக்குடன் செயற்படும் தொலைகட்சியான குறிப்பாக சிரச மற்றும் சக்தி ஆகிய ஊடகங்கள் உண்மைக்கு மாறான செய்திகளை நாளாந்தம் வெளியீட்டு வருகின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முசலி பிரதேசத்தினை பிறப்பிடமாக கொண்ட ஆதம்பாவா பாருக் இது வரைக்கும் மரிச்சிகட்டி .பாலைகுழி மற்றும் கரடிகுழி மக்கள் எதிர் நோக்கும் வாழ்வீட உரிமை குறித்து ஊடகங்களுக்கு எந்த வித அறிக்கையும் இடாமல் வாய்முடி மௌனியாக இருப்பதை நாங்கள் பார்க்கலாம்.
தேர்தல் காலம் என்பதால் குறித்த முன்று மாத காலமாக ஆதம்பாவா பாருக் மன்னார் மாவட்டத்தில் உள்ள மையத்து வீடாக இருந்தாலும் கல்யாண வீடாக இருந்தாலும் சரி சாமத்திய வீடாக இருந்தாலும் வீடு வீடுடாக தேடி தேடி செல்லும் ஆதம்பாவா பாருக்கினால் ஏன் இந்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை பற்றி பேசாமல் வாய் முடி மௌனியாக இருக்கின்றார்.
முசலி பிரதேசத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் செல்லா காசாகவே எமது மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்.
முசலி மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி சிங்கள அமைச்சர்கள் பேசுகின்றார்கள் சம்பிக்க ரணவக்க ராஜத சேனா ரத்ன இன்னும் பல சிங்கள தலைவர்கள் பேசுகின்ற வேலை வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசாமல் செவிடன் காதில் சங்கு ஊதியன் போன்று ஆதம்பாவ இருப்பதை கானும் போது மிகவும் கவலையாக இருக்கின்றது.
Veettukku anuppa vandditaver irukku?
ReplyDeleteippadiyana manitharkalukkalam thakuntha padam pukutunkal
ReplyDelete'நமக்கேன் வம்பு' எனும் கொள்கையில் இருந்துவிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வாலாட்டியபடி ஓடோடி வருவார் வாக்குப்பொறுக்க...
ReplyDelete