இலங்கை பெண்கள் கிரிக்கெட், அணியில் பாலியல் இலஞ்சம் - ஆதாரங்கள் கிடைத்தன
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம் பெறப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது, இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் நிர்வாகிகள் சிலர் பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்த அமைச்சு கூறியுள்ளது.
Post a Comment