Header Ads



"ஓயப்போவதில்லை" - ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் தம்மீது குற்றம் சுமத்துவதற்கு எவ்வித சாட்சியங்களும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இதனை தெரிவித்தார்.

ஊடக சர்க்கஸ் அடிப்படையில் இந்த வழக்கை சில தரப்புக்கள் முன்னெடுத்து செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை விசாரணையின் பின்னர் கருத்துரைத்த கொலையுண்ட பாரத லக்ஸ்மனின் மகளான ஹிருணிகா பிரேமசந்திர, தமது தந்தையின் கொலை வழக்கை மேல்நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றமை முக்கிய முன்னேற்றமாகும்.

இந்தநிலையில் தமது தந்தையின் மரணத்துக்கு காரணமானவர்களை சட்டத்துக்கு முன் கொண்டு வரும் வரையில் ஓயப்போவதில்லை என்றும் ஹிருணிகா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.