என்ன கூத்து இது..?
-gtn-
நேற்றைய 22-03-2015 தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர் இன்று பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற விவகார ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன தனது பதவியை இன்றைய தினம் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பு தொடர்பில் திருப்தியற்ற நிலையினால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் இன்றைய தினம் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த யாபா அபேவர்தன பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இது ஒரு கூத்து மட்டுமல்ல, இவர்கள் அனைவரும் கூத்தாடிகளே, இது தெரியாமல் இவர்களை தலையில் வைத்துக் கொண்டாடும் மக்கள்தான் முட்டாள்கள்.
ReplyDeleteமக்கள் விழித்தெழுந்தால் மட்டுமே அனைத்துக் கூத்தாடிகளையும் அடித்து விரட்டலாம்.