Header Ads



கைக்கு எட்டும் தூரத்தில் பறந்த பிரம்மாண்ட பயணிகள் விமானம் (படங்கள் இணைப்பு)

கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான பயணிகள் விமானம் கடலில் மிதந்து வருகிறது. கண்ணை கசக்கிக்கொண்டு உற்றுப்பார்க்கின்றனர். அப்போதுதான் கடலுக்கு நெருக்கமாக அந்த விமானம் வந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

பயணிகள் விமானம் என்பதால் மிக மெதுவாகவே அது கடற்கரையை நோக்கி வருகிறது. விமானத்தின் நிழல் சில நொடிகளில் கடற்கரையை இருட்டாக்குகிறது. இதற்குள் சுதாரித்த பயணிகள் தங்கள் கேமராக்களில் இந்த அரிய தருணத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்கின்றனர். சிலர் விமானத்தின் முன் நின்று செல்பி எடுக்கவும் பகீரத முயற்சி செய்கின்றனர்.

விமானம் கடற்கரையை நெருங்கி வந்ததும் அனைவரும் விமானத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக கத்தியபடி துள்ளிக்குதிக்கின்றனர். சில அடி வித்தியாசத்தில் விமானத்தை தொடமுடியாமல் போகிறது. இருந்தாலும், இந்த அரிய காட்சியை பார்த்த மகிழ்ச்சியில் தங்கள் விடுதிகளுக்கு திரும்பினர்.

பின்னர், செயின்ட் மார்டினில் உள்ள பிரின்சஸ் ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.





No comments

Powered by Blogger.