'மரண வீட்டில், அரசியல் பேசிய மஹிந்த'
நாடு முழுவதும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் மென்டிஸின் இறுதி கிரியைகளில் நேற்று மாலை கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மனோஜ் மென்டிஸை கொலை செய்தவரை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தான் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment