Header Ads



தலிபான்களுக்கு சவாலாக சாரா பாஹாய்

ஆப்கன் நாட்டை தங்கள் பிடியில் வைத்துள்ள தலிபான்களுக்கு சவாலாக, ஒரு பெண், 10 ஆண்டுகளாக வாடகைக் கார் ஓட்டி வருகிறார். சாரா பாஹாய், 38, எனும் இந்தப் பெண் மீது பயங்கரவாதிகள் பலமுறை கொலைவெறி தாக்குதல் நடத்தியபோதும், தொடர்ந்து தைரியமாக காரோட்டி வருகிறார். பயங்கரவாதிகளின் மிரட்டல் மற்றும் தாக்குதலை சமாளிக்க, ஸ்டியரிங் பிடித்துக்கொண்டே,  துப்பாக்கியையும் இயக்குகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், சாராவின் சகோதரியின் கணவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். சகோதரியையும், அவளது ஏழு குழந்தைகளையும் பராமரிக்கவும், குடும்பச் செலவிற்காகவும் வாடகைக் கார் ஓட்டத் துவங்கியதாகவும், தினம், 1,200 ரூபாய் வரை வருமானம் வருவதாகவும் சாரா கூறியுள்ளார்.

மேலும், ஆப்கன் பெண்களை வீட்டை விட்டு வெளியில் வந்து, தைரியமாக தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.