Header Ads



இஸ்லாமிய தேசத்தை கட்டியெழுப்ப முஸ்லிம்களுக்கு அழைப்பு

பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமிய தேசத்தை கட்டியெழுப்ப உலகெங்குமுள்ள முஸ் லிம்களுக்கு ஐசிஸ் ஜpஹாத் ஆயுதக் குழுவின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். 

முஸ்லிம்கள் இஸ்லாமிய தேசத்திற்கு புலம் பெயர்வது அவர்களது கடமையாகும் என்று ஐசிஸ் தலைவர் அபு+பக்கர் அல் பக்தாதி வலியுறுத்தி யுள்ளார். குறிப்பாக நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், இராணுவ மற்றும் நிர்வாக நிபுணர்களுக்கு அவர் விசேட அழைப்பை விடுத்துள்ளார். 

ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்து ஐசிஸ் கிளர்ச்சியாளர் கள் இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை பிரகடனம் செய்தது. இவ்வார ஆரம்பத்தில் ஈராக் இஸ்லாமிய தேசம் (ஐசிஸ்) வெளியிட்ட ஒலி வடிவ அறிவிப்பில், அந்த அமைப்பின் தலைவரான அபு+ பக்கர் அல் பக்தாதி கலீபாவாகவும் அனைத்து முஸ்லிம்களின் தலைவராகவும் அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஒரு மாதத்திற்குள் ஈராக் மத்திய அரசு ஐசிஸ் தலைமையிலான சுன்னி கிளர்ச்சியாளர்க ளிடம் நாட்டின் கணிசமான நிலப்பகுதியை இழந் தது. தமது இஸ்லாமிய தேசம் வடக்கு சிரியாவின் அலப்போ நகரில் இருந்து கிழக்கு ஈராக்கில் தியாலா மாகாணம்வரை பரந்திருக்கும் என்று ஐசிஸ் குறிப்பிட்டது. இஸ்லாமிய சட்டத்துடன் அரசொன்றை அமைப் பது ஜpஹாத் போராளிகளின் நீண்டகால இலக்காக இருந்து வருகிறது. 

'முஸ்லிம்களே உங்களது தேசத்தை நோக்கி விரையுங்கள். ஆம் இது உங்களது தேசமாகும். விரையுங்கள் ஏனென்றால் சிரியா சிரியர்களுடைய தல்ல ஈராக் ஈராக்கியர்களுடைய தல்ல" என்று கடந்த செவ்வாய்க் கிழமை அல் பக்தாதி வெளி யிட்ட புதிய ஓடியோ செய்தியில் குறிப்பிட்டுள் ளார். 

'எங்குமிருக்கும் முஸ்லிம்களே எவர் இஸ்லாமிய தேசத்தை நோக்கி ஹிஜ் ரா (புலம்பெயர்தல்) செய்ய முடியுமான நிலையில் இருக்கிறீர்களோ அவரை அதனைச் செய்ய விடுங்கள். ஏனென்றால் இஸ்லாமிய தேசத்தை நோக்கி ஹிஜ் ரா செய்வது கடமையாகும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஜpஹாத் போராளிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமான புனித ரமழான் மாதத்தில் தமது போராட்டத்தை தீவிரப்படுத்துமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

'அல்லாஹ்வின் பாதையில் செல்வதற்கு சிறந்த மாதம் அல்லது வேறு எந்த மாதத்தையும் விட ஜpஹாத் சிறப்பானதாகும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள். நேர்மையான முன்னோர்களின் வழியை பின்பற்றுங்கள்" என்று 19 நிமிடங்கள் கொண்ட அந்த ஓடியோ செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐசிஸ் தலைவர் அல் பக்தாதி குறித்து வெளியு லகுக்கு மிக குறைவான தகவல்களே கசிந் துள்ளன. அவர் அல்கொய்தா தலைவர்களான ஒசாமா பின்லாடன் மற்றும் அய்மன் அல் சவாஹிரி போலன்றி வீடியோ செய்திகளில் தோன்றுவ தில்லை. இதனால் அவர் "புலப்படாத n'ய்க்" என்று விபரிக்கப்பட்டு வருகிறார். 

இந்த ஓடியோ செய்தியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி நீண்ட நாடுகளின் பட்டியலையும் வெளியிட்டிருந் தார். 'அல்லாஹ்வின் ஆணையாக நாம் பழிவாங்க வேண்டும். அதற்கு காலம் எடுத்தாலும் நாம் பழி தீர்ப்போம்" என்றார். இந்நிலையில் ஈராக் எல்லையில் உள்ள சிரிய நகரான பவ்கமாலை கைப்பற்றியதாக ஐசிஸ் நேற்று முன்தினம் குறிப்பிட்டது. இதில் வடக்கு சிரிய நகரான அல் பாப்பில் தடுத்து வைத்திருந்த 100க்கும் அதிகமானோரை விடுவித்ததாகவும் ஐசிஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே ஐசிஸ் கிளர்ச்சியாளர்கள் ஸ்குட் ஏவுகணை உட்பட இராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்ட அணிவகுப்பொன்றை சிரியாவின் வடக்கு நகரான ரக்காவில் நடத்தி யுள்ளது. இந்த அணிவகுப்பு வீடியோ இணைய தளத்திலும் போடப்பட்டுள்ளது. ஈராக்கில் சுன்னி கிளர்ச்சியாளர்களின் முன்னேற் றம் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க துருப்பு கள் அங்கிருந்து வெளியேறிய பின் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. 

No comments

Powered by Blogger.