தமிழ் இனவாதிகள் கைது செய்யப்படுவார்களா..? (படங்கள்)
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் 22.05.2013 சம்பிரதாயபூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் மீள் குடியோற்ற சிங்களக்கிராமமான மங்களகம மற்றும் தமிழ்க்கிராமமான பெரியபுல்லுமலை,முஸ்லிம் கிராமமான உறுகாமம் ஆகிய ஊர்களில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்றைய தினம் உறுகாமத்தில் இந்திய அரசின் வீட்டுத்திட்டமா இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? எனத் தலைப்பிடப்பட்ட இனத்துவேஷத்தை தூண்டும் வகையிலான முதல் பக்கத்தில் தமிழ் மொழியிலும் மறுபக்கத்தில் சிங்களத்திலும் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் உறுகாமத்தில் வைத்து பவினியோகிக்கப்பட்டது.
உறுகாம நிகழ்வின் போது முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்,ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம இனைத்து அத் துண்டு பிரசுரத்தை பார்வையிடுவதனை படங்களில் கானலாம்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நொக்குடன் துண்டுப்பிரசுரம் விநியோகித்த இவர்கள் குறித்த ஆதாரங்கள் இங்குள்ள புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட இந்த தமிழ் இனவாதிகள் கைது செய்யப்படுவார்களா என பிரதேச முஸ்லிம்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
Post a Comment