Header Ads



மச்சான் ஞானசார..!

(GtN) இலங்கையில் வெளியாகும் பிரபல சிங்கள சஞ்சிகையான பெப்பராசியாவின் ஆசிரியர் சேபால அமரசிங்க வசிக்கும் பெல்லான்வில மயூர வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு புலனாய்வுப் பிரிவினர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலனாய்வுப் பிரிவை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அமரசிங்கவின் வீடும், அலுவலகமும் ஒரே இடத்திலேயே அமைந்துள்ளது. தான் அலுவலகத்தில் இருந்து வெளியேற கொண்டிருந்த போது, இரண்டு பேர் அங்கு வந்தனர் எனவும் அவர்கள் தான் அறிந்த அயல் வீட்டை சேர்ந்த ஒருவருடன் வந்தாகவும் அமரசிங்க கூறியுள்ளார்.

அயல் வீட்டவர் அழைத்து வந்த இருவர் தனது அலுவலகத்தை தேடிக் கொண்டிருந்தாகவும் அப்போது, அந்த அயல் வீட்டவர் அவர்களை விசாரித்த போது, தாம் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி, அடையாள அட்டையை காட்டியதாக அவர் கூறியுள்ளார்.

எதற்காக வந்தீர்கள் என புலனாய்வு பிரிவினரிடம் கேட்ட போதும், தாம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்காக வந்தாக கூறியதாகவும் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 04 ஆம் திகதி சேபால அமரசிங்க, குற்றப்புலனாய்வுப் பிரிவின் 04 ஆம் மாடிக்கு சென்று வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாக மச்சான் ஞானசார என்ற தலைப்பில் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டமை தொடர்பான விசாரணைக்காகவே அவர் 4 வது மாடிக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

1 comment:

  1. அரசாங்கத்திற்கும் ஞானசாரவிற்கும் அப்படியொரு பாசப்பிணைப்பு அதனால்தான் அரசாங்கத்திற்கு பொறுக்கமுடியாது....

    ReplyDelete

Powered by Blogger.