யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மீது தாக்குதல்
யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் முன்னால் இன்று 15-02-2013ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் அவ்விடத்தை விட்டுச் சென்ற பின்னரே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய இனந்தெரியாத குழுவை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டும் புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் ஒருவரது கமரா இனந்தெரியாத குழுவினரால் பறிக்கப்பட்டும் உள்ளது.
Post a Comment