Header Ads



மன்னார் - முசலி பிரதேச சபையிடம் மக்கள் விடுக்கும் வேண்டுகோள்



(எஸ்.எச்.எம்.வாஜித்)

முசலி பிரதேச சபைக்குற்பட்ட மணற்குளம், இலந்தைக்குளம், வெளிமலை, மேத்தன்வெளி, சிலாவத்துறை, பொற்கோணி மற்றும் பண்டாரவெளி இது போன்ற இன்னும் பல மிள்குடியேற்ற கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களில் கடந்த காலங்களை விடவும் இம்முறை கட்டாக்காலி ஆடு மாடு அதேபோன்று யானைகளின் அட்டகாசம் வெகுவாக அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 மாட்டு உரிமையாளர்கள் தங்களின் மாடுகளைச் சரியாக பராமரிக்காததினால் விதிகளில் ஆங்காங்கே அலைந்து தெரிவதனால் போக்குவரத்துக்கு மற்றும் பாதைசாரிகளும் தடையாக உள்ளன.

தற்போது முசலி பிரதேச மக்கள் விவாசய பயிர்செய்கைசெய்துள்ளனர் மதம்பிடித்த யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே முசலி பிரதேசசபை தவிசாளாஇமுசலி மக்களின் வாக்குகளை பெற்ற உறுப்பினர்கள் மற்றும் முசலி பிரதேசபை செயலாளார் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.





1 comment:

Powered by Blogger.