Header Ads



குளியாப்பிட்டியில் இஸ்லாத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)



(இ. அம்மார்)

இன்று குளியாப்பிட்டிய நகரில் அஸ்வெத்தும விஹாரைக்கு அருலிருந்து வெதஹாமுதுருவோ என்பரின் கீழ் இயங்கும் ஹெலசிஹல ஹிரு என்ற அமைப்பின் ஏற்பாட்டில்   ஹலாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிக்குகள் உட்பட சுமார் 150 பேர் அடங்கிய குழுவொன்று குளியாப்பிட்டி நகருக்கு முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படக் கூடிய பதாதைகளை ஏந்தியவாறு குளியாப்பிட்டிய பஸ் நிலையத்திற்கு அருகில் சென்று அல்லாஹ் என்ற அரபு பதாதை சூட்டப்பட்ட கொடும்பாவி ஒன்றை எரித்தனர். இவர்கள் ஏந்தி வந்த பதாதைகளில் முஸ்லிம்களை மிகவும் நோவிக்கும் வகையில் பன்றி ஒன்றின் உருவத்தின் மேல் அரபில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது. 


இது சம்மந்தமாக குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமாத் தலைவர் அஷ்ஷெஹ் சித்தீக், குருநாகல் மாவட்ட  ஸ்ரீ. சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்களுக்கு நேரடியாக முறைப்பாடு செய்ததை அடுத்து அப்துல் சத்தார் உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கும் அமைச்சர்களான எம். எச். எம் பௌசி, அநுரயாப்பா போன்றவர்களுக்கு இது சம்மந்தமாக தெரியப்படுத்தியதுடன் உடனடியாக குளியாப்பிட்டிக்கு விரைந்தார். இவருடன் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். நஷர் இணைந்து கொண்டார்.


இவர்கள் குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்க மற்றும் குளியாப்பிட்டிய நகர முதல்வர் லஷ்க்மன் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து இவைகளைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற் கொண்டனர்.

இது சம்மந்தமாக குளியாப்பிட்டிய நகரில் முக்கியமான பௌத்த சமயத் தலைவர்களைச் சந்தித்ததில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளியாப்பிட்டிய நகரில் உள்ளவர்கள் எவரும் சம்மந்தப்பட வில்லை எனவும் இதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டாலும் முஸ்லிம் சிங்கள உறவில் விரிசல் ஏற்படுவதற்கு தாங்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்தனர்.


முக்கியமாக குளியாப்பிட்டிய நகர பிதா  லஷ்க்மன் அதிகாரி எக்காரணம் கொண்டும் குளியாப்பிட்டி நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெற தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றதுடன் பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்க அவர்களும் இது சம்மந்தமான இனப்பிரச்சினைகளுக்கு பொலிஸார் இடமளிக்கப்போவதில்லை என்றார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் மத்தியில் பிரச்சினையை உண்டு பண்ணுவதற்கு முன்நின்றவர்கள் சம்மந்தமான அனைத்து தகவல்களும் புகைப்படங்களும் தம்மிடம் இருப்பதாகவும் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அப்துல் சத்தார் தெரிவித்தார்.




24 comments:

  1. Hi Friends,

    இன்னும் வெளிவந்திராத கதை என்னவென்று சரியாகத் தெரிந்திராத விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக எகிறும் நமது மதத்தலைவர்கள் இதோ காலடியிலேயே நிகழும் இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றியும் எகிறலாமே.

    நிஜத்தை விட்டு நிழலுக்கு எகிறுவது ஏன்?

    ReplyDelete
  2. Pillayaiyum killi thottilaiyum aattuhiraarhal.

    ReplyDelete
  3. இறைவா!! இவர்களுக்கு நல்ல ஹிதாயத்தை வழங்குவாயாக

    ReplyDelete
  4. இறைவா எங்கள் பொறுமையை இனியும் சோதிக்காதே!
    இவர்களை திருத்திவிடு
    இல்லையேல் அனைவரும் அறியும் வகையில் தீர்த்துவிடு
    "எம் எல்லாத்தேவைக்கும் அல்லாவே போதுமானவன்!

    ReplyDelete
    Replies
    1. Why dont we decide to face them... its time to raise our hands not only to Allah...to defend our selves and our beloved deen...there is no point living compromising our dignity and respect. Time to teach them a lesson which they pushing us to teach them.. if death come then we face Allah with honour. After all thats all matters.

      Delete
  5. It is time for muslims to wake up. We are not the people of begging. It is not our choice to be born in Sri Lanka..it is our birth right to live there with dignity and respect. If they compromise that then no meaning of living. We are the decendants of Omar bin Khattab and Khalid bin Waleed, Ali ibin Abitalib and Sad ibn abi Waqas alike.. They defended the honour of Islam.. so we do.. A great chance to attain Shaheed...these Bhuddist bourn to live and re incarnatre n live again story people... but we bourn to die and we love to die for yhe sake of defending our deen.. we been patient enaugh...its time to give it to them after all these bold head cow boys are the one asking for it...

    ReplyDelete
  6. இவாகளுக்கு அழிவு நெருஙகிவிட்டது எங்களிடமுள்ள ஒரே ஒரு ஆயுதம் துஆ மட்டுமே!!! யா அல்லாஹ்! இவா்களை திருத்திவிடு இல்லையேல் அழித்து விடு இவா்களுடைய கொடும் செயலுக்கு இரு சிறுவா்களையும் பழி கேடக்கிவிட்டார்களே!!!!

    ReplyDelete
  7. யா அல்லாஹ் இந்த ஜெஸ்லியா உட்பட அணைவரைக்கும் ஹிதாயத் எனும் நல்வழியை காண்பிப்பாயாக.,
    யா அல்லாஹ் உன்னுடன் சண்டையிட வருகிறார்கள் நீயே இவர்களை கவனிக்க தகுதியானவன்., உன்னிடமே இவர்களின் அடாவடித்தனங்களை சமர்ப்பிக்கிறோம்., அத்துடன் எங்களை(முஸ்லிம்களை)குர்ஆன்,ஹதீஸ் வழியில் ஒன்று படுத்துவாயாக.உன் சோதனைகளில் இருந்து எங்களை காப்பாயாக,எங்களின் தவறுகள் தான் இப்படியான வன்முறைகளுக்கு காரணம் ஆகவே எங்களை உன் நல்லோர்களின் வழியில் செலுத்தி எங்களையும் அந்த நல்லோர் கூட்டத்துடன் சேர்த்திடுவாயாக,

    ReplyDelete
  8. அடங்குங்கடா இல்லாவிட்டால் அடக்கப்படுவீர்கள்,நாங்கள் கோழைகள் அல்ல ஆனாலும் பொறுமையும் அல்லாஹ்வின் ரசூலின் வழிகாட்டல்களும் எங்களைத்தடுத்து நிறுத்துகிறது. அந்த பொறுமையை அல்லாஹ்வின் ரசூல் எதுவரை கட்டிக்காக்க வேண்டும் என்பதையும் எங்களுக்கு காட்டித்தந்துள்ளார்கள் அந்த எல்லை தாண்டும்போது உங்கள் பத்துப்பேருக்கு நாம் ஒருவர் சமமாக திகழ்வோம். யா அல்லாஹ் எங்களுக்கு பொறுமையையும் சகிப்புத்தண்மையையும் தந்தருள்வாயாக,யா அல்லாஹ் எங்களின் சக்தியை அதிகரித்து ஈமானை பலப்படுத்துவாயாக.

    ReplyDelete
  9. yaa allah show your power u r the best planner yaa allah

    ReplyDelete
  10. plz yaa allah show u a power yaa allah guys pls dont 4gt u ask duwa in 5time prayer yaa allah inda punisamika masam mudiratuku munala evanuhaluku karanag katu yaa rahmane pls ask duwa duwa is the key of muslims

    ReplyDelete
  11. Peyar kurippiaamal veera vasanam kathaikum kolaikal puththiyai theettuwathu nallathu

    ReplyDelete
  12. varungal anai varum onru diralvoom, nalaya takbeer allahu akkubar insaallah soon

    ReplyDelete
  13. இதன் பிறகும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அற்ப உலக லாபங்களுக்காக மௌனம் காத்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் எங்களை போன்ற கோழைகள் வேறு யாரும் இருக்க மாட்டர்கள்.
    குறிப்பாக மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர்கள் வெறும் அறிக்கைகள் விடாமல் இதன் பிறகாவது சட்டப்படி ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுக்க மிக மிக கடமைப்பட்டுள்ளனர்.
    இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறது, இஸ்லாமிய ஷரியா சட்டம் கொடூரமானது, முஸ்லிம்கள் நாட்டை பிடிப்பவர்கள், முஸ்லிம்கள் அவர்களுடைய மார்கத்திற்கு நிற்பந்திப்பவர்கள் என்று இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வாய்க்கு வந்த படி விமர்சித்தார்கள். இவர்கள் என்னதான் ஆதாரமில்லாமல் சொன்னாலும் கிணற்றுத் தவளைகள் போல் ஒன்றும் அறியாமல் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்பதை நன்கு அறிந்த துவேசம் கக்கும் காவிக் காடையர்கள் தற்போது இணையில்லாத, சர்வ வல்லமை மிக்க, உலக மனிதர்களுக்கெல்லாம் கடவுளாக உள்ள அல்லாஹு சுபஹானவு தாஅலாவுக்கு பொம்மை வடிவம் கொடுத்து (நவூதுபில்லாஹ்) அதை மக்கள் மாதியில் பகிரங்கமாக எரித்து உள்ளனர் பாவிகள். இந்த உச்ச கட்ட இஸ்லாமிய மார்கத்திற்கு எதிரான போர் பிரகடனத்திற்குப் பிறகும் பொறுப்புள்ளவர்கள் இதற்கு காரணமாக இருப்பவர்களை சட்டத்தின் தண்டனைக்கு முன் நிறுத்தி தக்க தண்டனை கொடுக்க வில்லை என்றால், முஸ்லிம் உம்மத்தின் பொறுப்புக்களை உதாசீனம் செய்த குற்றத்திற்கு அவர்கள் ஆளாகுவார்கள் என்பதை முதலில் ஆணித்தரமாக மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. துஆ கேட்க வேண்டும் எதிராக ஒன்று பட வேண்டும் என்பதெல்லாம் உண்மை தான். கருத்து வேறுபாடு இல்லாத விடயம் தான். ஆனால்.......
    அல்லாஹ்வின் உதவி கிடைக்க, பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் பட "தகுதி" ஆன நிலையில் உள்ளோமா? ஒரு டிவியை , பாட்டை, படத்தை அல்லாஹ்வுக்காக தியாகம் செய்ய துணியாத நாம் எப்படி சமூகத்துக்காய்!!! அடிப்படை உள்ள சமூகமே வெற்றியடையும். இந்நாட்டில் நன்றாக இருந்தோம் - அல்லாஹ் நம்மை கவ்ரவமாக வைத்திருந்தான். கேவலத்தை நாடினோம் - அல்லாஹ் அதன் பால் நம்மை விட்டு விட்டான். மாறுவோம் - மாற்றுவோம் ( அல்லாஹ் உதவியுடன் நம் நிலையை ).

    ReplyDelete
  15. அழ்ழா போதுமானவன் இவர்களையும் விட படு மோசமாக நடந்தவர்கள் நபி இருந்த காலப்பகுதியில் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களையும் கூட அழ்ழா மன்னித்து கிதாயத்தும் வழங்கியுள்ளான்.
    இவ்வாறு இருப்பவர்களை எப்படி என்ன செய்யவேண்டும். என்பதையும் நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

    யா அழ்ழா இவர்களுக்கு ஹிதாயத்துக்களை வழங்கி அவர்கள் மூலமாக உன்னையும், இஸ்லாம் சமயம் பற்றிய விளக்கத்தைக் கொடுக்கக் கூடியவர்களாக மாற்றி வைப்பாயாக!

    ReplyDelete
  16. யா அல்லாஹ் நீயே போதுமானவன்

    ReplyDelete
  17. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Tolukin iruthil KUNUTH othavandum Ivarkal Paynthullarkal

    ReplyDelete
  18. முஸ்லீம்களின் உரிமைகூட இல்லாமல் போய்விட்டது பதவி ஆசைபிடித்த முஸ்லீம் பெயர் தாங்கிய அரசியல்வாதிகளால் இவர்கள் பதவியை தக்கவைத்துக்கொள்ள வாய் கிழிய பேசவும் செய்வார்கள் ஊமையாக இருக்கவும் செய்வார்கள்

    ReplyDelete
  19. நாய் என்றால் குறைக்கத்தான் செய்யும்... இதையெல்லாம் கணக்கெடுத்தா நம்மட இமேஜ் தான் டமேஜ்

    ReplyDelete
  20. இலங்கை அரசு முஸ்லிம்களை இன்னொரு உள்நாட்டு யுத்தத்திற்கு தள்ளி விடாது என நம்புகிறேன். முஸ்லிம்களின் மேல் உள்ள காழ்புணர்வு களையப்பட முஸ்லிம் சமூகம் ஒன்று பட்டு வீதிகளில் போராடிட வேண்டும். முஸ்லிம்கள் நினைத்திருந்தால் புத்தரின் கொடும்பாவியை எரிப்பதற்கு நெடு நேரம் ஆகாது. ஆனால், இஸ்லாம் அதை செய்ய சொல்லவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.