Header Ads



எஸ்.எம்.அய்யுப்பின் 'எனக்குள் பெய்த மழையின் நிறங்கள்' (படங்கள்)



(அபுதீனா)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எஸ்.எம்.அய்யுப் எழுதிய “எனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் அறிமுக விழா இன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார கலைத் திரைக் கூடத்தில் வெளியிட்டு வைக்கபட்பட்டது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக கலை கலாசார பீட பீடாதிபி கே.எம்.பளீல் ஹக், இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீட பீடாதிபதி ஏ.பி.எம். அலியார் மௌலவி உட்பட துறைத் தலைவர்களும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர். 

இக்கவிதை நூலின் முதற் பிரதியினை சாய்ந்தமருது முபாறக் டெக்ஸடைல் உரிமையாளர் சாமஸ்ரீ. எம்.எஸ்.எம். முபாறக் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். 







No comments

Powered by Blogger.