Header Ads



பாகிஸ்தானில் புரட்சி வெடிக்கும் - தாகிர்உல் காத்ரி எச்சரிக்கை

பாகிஸ்தானில், உண்மையான ஜனநாயகம் கோரி, போராட்டம் நடத்தி வரும், தாகிர் உல்-காத்ரியை கைது செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. ஊழல் விவகாரத்தில் சிக்கிய, பாகிஸ்தான் பிரதமர், அஷ்ரப்பை கைது செய்யும் படி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, "பாகிஸ்தானில் ஊழல் பெருத்து விட்டதால், பாகிஸ்தான் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்' என, "தேரிக்-மின் ஹஜ்-உல்-குரான்' கட்சியின் நிறுவனர், தாகிர் உல்-காத்ரி, கடந்த, மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.சூபி அமைப்பின் தலைவரான காத்ரி, கடந்த ஏழு ஆண்டுகளாக, கனடா நாட்டில் வசித்து வந்தார். ""பாகிஸ்தானில் உண்மையான ஜனநாயகம் அமைய, தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். தற்போதைய ஊழல் அரசு, நள்ளிரவுக்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், எகிப்து, துனிசியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை போல, பாகிஸ்தானிலும், தொடர் கிளர்ச்சியில் ஈடுபடுவோம்,'' என, காத்ரி எச்சரித்துள்ளார்.

லாகூரில் இவர் தொடங்கிய கண்டன ஊர்வலம், நேற்று, இஸ்லாமாபாத் வந்தடைந்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக, இவர் போராட்டம் நடத்தி வருவது, பாகிஸ்தான் அரசுக்கு, பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவரை கைது செய்ய, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தான், காத்ரியின் வீடு உள்ளது. பஞ்சாப் மாகாணத்தில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி, முதல்வராக உள்ளார். காத்ரியை கைது செய்தால், பிரச்னை ஏற்படும் என்பதால், நவாஸ் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி அமைதி காத்தது.தற்போது இஸ்லாமாபாத்தில், காத்ரி ஊர்வலம் நடத்துவதால், அவரை கைது செய்தால், அவரது ஆதரவாளர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, நிலைமை மோசமாகும், என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அஞ்சுகிறது.எனவே, காத்ரியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதா அல்லது கைது செய்வதா என்பதில் குழப்பம் நிலவுகிறது.

No comments

Powered by Blogger.