Header Ads



ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்றார் சம்மாந்துறை ஆசிரியை (படங்கள் இணைப்பு)


(ஏ.எம். தாஹா நழீம்)  

ஒவ்வொரு ஆண்டும் மகிந்த சிந்தனையின் கீழ் ஆசிரியர்களை கௌரவிக்கும் பரிசித் திட்டத்திற்கு அடிப்படைத் தகைமையை நிறைவேற்றுவது எல்லாராலும் செய்யக் கூடிய காரியமல்ல அதற்காக ஐந்து வருட காலத்தில் 50 நாட்களுக்கு குறைந்த விடுமுறையைப் பெற்றால் மாத்திரமே இந்த கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 

சம்மாந்துறையில் சென்னல் ஸாஹிறா வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தை பெற்றுக் கொண்ட பௌசியா சரீப், தனது ஆசிரியர் சேவையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் அர்பணிப்போடு ஆற்றிய சிறந்த சேவைக்காக 2012.10.09 ஆந் திகதி ஜனதிபதியினால் ” ஆசிரியர் பிரதீபா பிரபா”  விருதினை பெற்று சம்மாந்துறை ஆசிரியர் சமூகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் என்று கூறினால் அவை மிகையாகாது. 

இன்று சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் இந்த ஆசிரியரை இப்பாடசாலை  அதிபர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் இவர்களை பாராட்டுகிறார்கள் என்பதை இங்கு கோடிட்டுக் காட்ட வேண்டும்.

நானும் இந்த ஆசிரியரை வாழ்த்துவதோடு அவரது  சிறந்த சேவை எமது சமூகத்திற்கும் குறிப்பாக சம்மாந்துறை மக்களுக்கும் பெருமைகளை தேடித்தரும் என்பதில் ஐயமில்லை. 



No comments

Powered by Blogger.