Header Ads



5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறந்தால், கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா..?


- Dr அர்ஷாத் அஹமட் -


அண்­மையில் நீதி அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட ஒரு சுற்று நிருபம் நாட்டில் பேசு பொரு­ளா­கி­யி­ருக்­கி­றது. (தற்­போது அதனை இடை­நி­றுத்­தி­யுள்ளதாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது)


தலை எது? வால் எது? என்று தெரி­யாமல் பலரும், பற்­பல கருத்­துக்­களை வழமை போல தெரி­விக்க தொடங்கி இருக்­கின்­றனர். கொரோனா ஜனாசா எரிப்பு, கோத்தா வழி­முறை, மனித உரிமை மீறல், முஸ்­லிம்­களை வேண்டும் என்றே இலக்கு வைக்கும் நட­வ­டிக்கை .. இத்­தி­யாதி இத்­தி­யாதி என்று ஆளுக்காள் தங்­க­ளது கருத்­துக்­களை அள்ளி வீசிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.


இந்த பிரேதப் பரிசோதனை குறித்த சுற்றுநிருபம் பற்றி கருத்து தெரி­விப்­ப­தற்கு முதல் ஒரு சில அடிப்­ப­டை­களை அறிந்து கொண்டால் எல்லா விட­யங்­களையும் இல­கு­வாக விளங்கிக் கொள்­ளலாம்.


1. U5MR- Under 5 year mortality.

இது ஒரு நாட்டின் சுகா­தார நிலை­மையை அளக்­கின்ற சர்­வ­தேச சுட்டி. இது எவ்­வ­ள­வுக்கு எவ்­வ­ளவு குறை­வாக இருக்­கி­றதோ, அவ்­வ­ள­வுக்கு அவ்­வ­ளவு அந்த நாடு சுகா­தாரத் துறையில் நல்ல நிலையில் இருக்­கி­றது என்று அர்த்தம். 2022ஆம் ஆண்டு கணக்­கெ­டுப்­பின்­படி, இலங்­கையில் U5MR 6.5 per 1,000 live births. அதா­வது இலங்­கையில் உயி­ரோடு பிறந்த 1000 குழந்­தை­களில் 6.5 குழந்­தைகள் தங்­க­ளது ஐந்து வயதை பூர்த்தி செய்­வ­தற்கு முன்னே இறந்­தி­ருக்­கின்­றன. இது ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு, கிட்­டத்­தட்ட இணை­யான ஒரு பெறு­மானம். இந்த 6.5 குழந்­தை­களும் ஏன் இறந்­தன? என்ற கார­ணங்­களை, சுகா­தார அமைச்சு, குடும்ப சுகா­தார பணி­யகம், உலக சுகா­தார நிறு­வ­னங்கள் கூடி ஆராய்ந்த போது, அவை­களில் அதி­க­மான குழந்­தை­களின் இறப்பு, பிறப்பின் போது உள்ள குறை­பா­டுகள் (congenital disease) கார­ண­மாக நிகழ்ந்­தி­ருக்­கின்­றன என்று அறி­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஆகவே, அவற்றை தடுப்­ப­தற்­காக இவ்­வா­றான குழந்­தை­களை, வயிற்றில் இருக்கும் போதே, அபோர்சன் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்கும் சட்ட ஏற்­பா­டுகள் அண்­மையில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தன.


அது­போல, வேறு சில இறப்­பு­களில் இறப்­புக்­கான கார­ணங்கள் என்ன என்று தெளி­வாக இல்லை. இதுதான் இங்கே சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஏனெனில் இறப்­புக்­கான கார­ணங்கள் எவை என்று தெளி­வாகத் தெரி­கின்ற போது தான், அவற்றை எப்­படித் தடுப்­பது? என்­பதை நாங்கள் கண்­ட­றிந்து கொள்ள முடியும். அதற்­கான தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடியும். இன்னும் சுகா­தாரத் துறையை முன்­னேற்ற முடியும்.


2. ஒரு இறப்பு ஏற்­ப­டு­கின்ற போது அந்த இறப்பை எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் வைத்­தி­யர்கள் கொரோ­ன­ருக்கு (தீடிர் மரண விசா­ரணை அதி­கா­ரிக்கு) அறி­விக்க வேண்­டிய எந்த தேவையும் இல்லை. அந்த இறப்­புக்­கான கார­ணத்தை வைத்­தி­யர்கள் தெளி­வாக அறிந்து கொண்டால், அவர்கள் cause of death (COD ) கொடுக்க முடியும். உடலை ரிலீஸ் பண்ண‌ முடியும். தெளி­வான கார­ணங்கள் தெரி­யாத சந்­தர்ப்­பத்தில், அதை கொரோ­ன­ருக்கு அறி­விக்க வேண்டும். கொரோனர் இந்த உட­லுக்கு போஸ்ட்­மார்ட்டம் தேவையா இல்­லையா என்­பதை தீர்­மா­னிப்பார். அல்­லது, இது தான் COD என்று சந்­தே­கிக்­கப்­படும்‌ ஏதா­வது காரணம் ஒன்றை, COD ஆக உறு­திப்­ப­டுத்­துவார். இது தான் பிரச்­சி­னைக்­கு­ரிய இடம். ஏனெனில் பெரும்­பா­லான திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு, மருத்­துவம் குறித்த, அல்­லது மரணம் குறித்த போது­மான தெளிவு இல்­லாத கார­ணத்தால் பல்­வேறு மர­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த COD சரி­யா­ன­தாக இல்லை. ஆதலால் அதை தவிர்ப்­ப­தற்­காக, மேற்­கு­றித்த சுற்று நிருபம் நீதி அமைச்­சினால் கொரோனர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டி­ருக்­கி­றது. அது வைத்­தி­யர்­க­ளுக்கு அனுப்­பப்­ப­ட­வில்லை. சுகா­தார அமைச்­சினால் வெளி­யி­டப்­ப­டவும் இல்லை. ஆகவே சுகா­தார அமைச்சில் ஏற்­க­னவே இருக்­கின்ற எந்த நடை­மு­றை­யிலும், சேர்க்­கூ­ல­ரிலும் எந்த மாற்­றமும் இதனால் ஏற்ப்­ப­டப்­போ­வ­து­மில்லை. இது தான் அடிப்­படை.


“அப்­ப­டி­யானால் COD குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் போஸ்ட்­மார்ட்டம் செய்ய வேண்டும்” என்று இந்த சேர்க்­கு­லரில் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றதே என்று நீங்கள் கேட்­கலாம். அங்­கேதான் பிரச்­சினை இருக்­கி­றது. ஏற்­க­னவே வைத்­தியர் மர­ணத்­திற்­கான உறு­தி­யான காரணம் தெரிந்­தி­ருந்தால் அந்த உடலை கொர­ன­ருக்கு அனுப்பி இருக்க மாட்டார். அந்த உடல் மரண சான்­றிதழ் DC கொடுக்­கப்­பட்டு ஏற்­க­னவே விடு­விக்­கப்­பட்­டி­ருக்கும். கொரோ­ன­ருக்கு மர­ணித்த உடல் அனுப்­பப்­படும் சந்­தர்ப்­பங்­களில் அதில் ஏதா­வது ஒரு COD குறித்து சந்­தேகம் இருக்கும். அல்­லது தெரி­யாமல் இருக்கும். சந்­தேகம் இல்­லை­யென்றால் அதை கொர­ன­ருக்கு அனுப்ப வேண்­டிய எந்த தேவையும் இல்லை. அப்­படி சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தாக ஏதா­வது COD கொடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அதை உறு­திப்­ப­டுத்தி DC கொடுக்­காமல், அந்த உடல்­களை போஸ்ட்­மோர்டம் செய்ய அனுப்ப வேண்டும் என்­ப­துதான் இந்த சேர்க்­குலர் சொல்லும் செய்தி. இதை புரிந்து கொண்டால் எந்த குழப்­பமும் இல்லை. இது­கு­றித்து தெளி­வாக சுகா­தார அமைச்சு இன்னும் ஒரு சுற்று நிருபம் வெளி­யிட வேண்டும். அதுவும் விரைவில் வெளி­யி­டப்­பட வேண்டும். அப்­போ­துதான் இந்த சிக்­கல்கள் தீரும்.


உண்­மையில் இவ்­வா­றான நிலை­மை­களில் சரி­யான COD தெரி­யாத போது போஸ்ட்­மார்ட்டம் செய்­வ­துதான் மிகச்­சி­றந்த வழி­முறை. எல்லா நாடு­க­ளிலும் பின்­பற்­றப்­ப­டு­கின்ற சர்­வ­தேச வழி­முறை. இதில் எந்த வேறு­பாடும் இன­வா­தமும் இல்லை. நாம் ஓவ­ராக பில்ட் அப் கொடுக்க வேண்­டி­ய­தில்லை.


ஆகவே மரணம் ஒன்று நிகழ்ந்தால் வைத்­தியர் உறு­தி­யாக ஒரு COD தெரிந்­தி­ருந்தால் அந்த உடலை டெத் சர்­டி­பிகேட் கொடுத்து வழமை போலவே அவர் ரிலீஸ் பண்ண முடியும். அதை அவர்கள் கட்­டாயம் செய்ய வேண்டும். சட்ட ரீதியில் அணு­கு­வ­தற்­காக/ சட்டப் பிரச்­சி­னை­யி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக கொர­ன­ருக்கு அனுப்ப வேண்­டி­ய­தில்லை. அதற்கு எந்­த­வி­த­மான போஸ்ட்­மோர்ட்­டமும் தேவை இல்லை. இதை சிறு­வர்­க­ளுக்கு வைத்­தியம் செய்யும் வைத்­தி­யர்கள் கட்­டாயம் விளங்கிச் செயற்­பட வேண்டும். அப்­படி இல்­லை­யென்றால், கொரோனர் பார்த்துக் கொள்வார் என்று அவ­ருக்கு அனுப்­பினால் இனி தேவை இல்­லாமல் அந்த உடல் போஸ்ட்­மார்ட்டம் செய்­யப்­படும். சந்­தே­க­மான ஏதா­வது கார­ணங்கள் அல்­லது உறுதி இல்­லாத COD இருந்தால் அதை கொரோனருக்கு அறிவித்தால், முன்னைய காலங்களை போல, கொரோனர் தனக்கு விரும்பிய ஒரு COD கொடுத்து அந்த உடலை இனிமேல் விடுவிக்க பண்ண முடியாது. COD உறுதிப்படுத்துவதற்காக கட்டாயம் போஸ்மோட்டம் செய்ய JMO ற்கு அனுப்ப வேண்டும்.

இப்படி இந்த சேர்க்குலரை சரியான முறையில் விளங்கினால் இதில் எந்த குழப்பமும் இல்லை. வழமை போல உணர்ச்சிவசப்பட்டு இதை அணுக வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. கால் எது? தலை எது? என்று அறிந்தால் மாத்திரமே, நேர் எது, தலைகீழ் எது, என்பதை சொல்ல முடியும்.- Vidivelli

No comments

Powered by Blogger.