Header Ads



வெற்றிடமாகவுள்ள SLMC யின், தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு?


(எஸ்.என்.எம்.சுஹைல்)


வெற்­றி­ட­மா­க­வுள்ள முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி யாருக்கு வழங்­கப்­ப­டப்­போ­கி­றது என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்ள நிலையில், அந்த தீர்­மா­னத்தை முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளீமே எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நிசாம் காரி­யப்பர் தெரி­வித்தார்.


அத்­துடன், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் நாம் விடுத்த சவாலை எந்­த­வொரு பிர­தே­சமும் வெற்­றி­கொள்­ளா­மை­யினால் தேசியப் பட்­டியல் விவ­காரம் எமக்கு எந்­த­வி­தத்­திலும் சவா­லாக அமை­ய­வில்லை, மாறாக ஒரு வர­மாக அமைந்­துள்­ளது எனவும் மு.கா. செய­லாளர் தெரி­வித்தார்.


கடந்த பொதுத் தேர்­த­லின்­போது மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை மாவட்­டங்­களில் முஸ்லிம் காங்­கிரஸ் தனித்து மரச் சின்­னத்தில் போட்­டி­யிட்டு ஒரு தேசி­யப்­பட்­டி­யலை பெற்­றுக்­கொண்­டது. இதற்கு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவி­சாளர் முஹம்மத் சாலி நளீம் நிய­மிக்­கப்­பட்டார். இந்­நி­லையில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் அறி­விப்பு வெளி­யா­ன­தை­ய­டுத்து கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஏறாவூர் நகர சபைத் தேர்­தலில் மீண்டும் போட்­டி­யிட்டார். இந்­நி­லையில், கடந்த மார்ச் மாதம் முதல் முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசியப் பட்­டியல் பதவி வெற்­றி­ட­மாக உள்­ளது.


இத­னி­டையே, முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தேசியப் பட்­டியல் பத­வியை உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் வெற்­றி­கொள்ளும் பிர­தே­சங்­க­ளுக்கு வழங்க இருப்­ப­தாக அக்­கட்சி அறி­வித்­தது.


உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் முடிந்­துள்ள நிலையில் குறித்த வெற்­றி­டத்தை நிரப்­பு­வது தொடர்பில் வின­வி­ய­தை­ய­டுத்தே, அவ்­வெற்­றி­டத்தை நிரப்­பு­வது முன்னாள் எம்.பி. நளீமின் தீர்­மா­னத்தில் இருப்­ப­தாக மு.கா. செய­லாளர் தெரி­வித்தார்.


அத்­துடன், நாம் விடுத்த சவாலை காத்­தான்­குடி, ஏறாவூர் மற்றும் அட்­டா­ளைச்­சேனை ஆகிய பிர­தே­சங்­களே வெற்­றி­கொண்­டன. காத்­தான்­கு­டிக்கு ஏற்­க­னவே ஹிஸ்­புல்லாஹ் இருக்­கிறார். அட்­டா­ளைச்­சே­னைக்கு உதுமான் லெப்பை இருக்­கிறார். எனவே, அப் பிர­தே­சங்­க­ளுக்கு தேசியப் பட்­டியல் வழங்க வேண்­டிய அவ­சியம் தற்­போ­தைக்கு இல்லை. எனவே, ஏறா­வூ­ருக்கு நாம் சந்­தர்ப்­பத்தை வழங்க முடியும்.


இது தவிர எமது சவாலை வேறு எந்த ஊரும் வெற்­றி­கொள்­ளா­ததால் எமக்கு தேசி­யப்­பட்­டியல் விவ­காரம் சவா­லாக அமை­ய­வில்லை. அது வர­மாக அமைந்­துள்­ளது. இந் நிலையில் மீண்டும் நளீம் அந்த பத­வியில் தொடர முடியும். அவர் விரும்­பினால் தொடர்ந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னாக பதவி வகிக்­கலாம் என்றார்.


இந்­நி­லையில் இது விட­ய­மாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவி­சா­ள­ரு­மான நளீ­மிடம் வின­வி­ய­போது, நான் ஏறாவூர் நகர சபையின் தவி­சா­ள­ராக மக்கள் பணி­களை தொடரவே எதிர்­பார்த்­துள்ளேன் என தெரி­வித்தார்.


அத்­துடன், இன்­றைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீடு வழங்­கு­வதில் முனைப்பு காட்­டு­வ­தாக இல்லை. எனவே, நிதி ஒதுக்­கீடு இல்­லாமல் எமது பிர­தே­சத்­திற்கு அபி­வி­ருத்­தியை செய்­வ­தையும் மக்கள் பணி­களை மேற்­கொள்­வ­திலும் சிரமம் ஏற்­ப­டலாம். இதனால், நான் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகிப்­பதை விட நகர சபையின் தவி­சா­ள­ரா­குவதற்கு எதிர்­பார்த்­துள்ளேன்.


எமக்கு ஏறாவூர் நகர சபையை அமைப்­ப­தற்கு இன்னும் இரண்டு ஆச­னங்கள் தேவைப்­ப­டு­கின்­றது. சகல கட்­சி­க­ளி­னது ஒத்­து­ழைப்­பையும் நாம் கோரி­யி­ருக்­கிறோம். பல கட்­சிகள் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்க இணங்­கி­யுள்­ளன என்றார்.


இந்­நி­லையில் இது விட­ய­மாக முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லா­ள­ரிடம் மீண்டும் வின­வி­ய­தற்கு, தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்­சியை கையப்­ப­டுத்தும் பணி­களில் நாம் மும்­மு­ர­மாக இருக்­கிறோம். இந்த வேலைகள் அடுத்த வார­ம­ளவில் நிறை­வ­டைந்து விடும். அதற்குப் பின்னர் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மைத்­துவம் இது­பற்றி கலந்­து­ரை­யாடி தீர்மானமொன்று வரும் என்றார்.- Vidivelli

No comments

Powered by Blogger.