Header Ads



மன்னார் பிரதேச தவிசாளர் முஜாஹிரை பதவி நீக்கும் வர்த்தமானி வட மாகாண ஆளுநரால் இரத்து


மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிரை பதவி நீக்கி ஏற்கனவே விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை வட மாகாண ஆளுநர் இரத்து செய்துள்ளார்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் வௌியிடப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிர், தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.

முன்னாள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

இந்நிலையிலேயே ஏற்கனவே வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.